பக்கம் எண் :

மலரும் உள்ளம்109

எங்கள் தாத்தா

தாத்தா எங்கள் தாத்தா - மிகத்
   தங்க மான தாத்தா.
பார்த்தால் அருகில் அழைப்பார் - என்னைப் 
   பாசத் தோடே அணைப்பார்.

படிப்புச் சொல்லித் தருவார் - நல்ல
   பழக்கம் கற்றுத் தருவார்.
சிடுசி டுக்க மாட்டார் - என்றும்
   சிரித்துக் கொண்டே இருப்பார்.

அறுப துவய தாச்சு - ஆனால்
   அவரைத் தொடர்ந்து நடக்க
ஒருவரும் இல்லை இங்கே! - இது
   உண்மை, உண்மை, உண்மை!

மூன்று பத்து, இரண்டு - பற்கள்
   முழுதும் அவர்க்கே உண்டு.
ஊன்று கோலே வேண்டாம் - அவர்
   ஓடி யாடித் திரிவார்.