காந்தி வழி
அன்பு
உத்தம ரில்மிக உத்தமராய் - இந்த
உலகில் உதித்தவர் நால்வரென்போம்.
அத்தகை நால்வரை நல்கியதாம் - நம(து)
ஆசியாக் கண்டமென் றேயுரைப்போம்.
ஏசுவும் நபிகளும் தோன்றியதே - இந்த
ஈடில்லா ஆசியாக் கண்டமென்போம்.
மாசில்லாப் புத்தரும் அன்னார்பின்னே - இந்த
மண்ணிலே காந்தியும் வந்தாரென்போம்.
சித்திரந் தன்னிலும் துயரமதைக் - காணின்
சிந்தை நெகிழ்ந்திடும் காந்திமகான்
இத்தல மக்களின் இன்னல்கள் போக்கிட
ஏற்றநல் அன்பு வழிவகுத்தார்.
இப்பாடல்1954 ஆம் ஆண்டு காந்தி பிறந்த நாளில் திருச்சி வானொலி நிலையத்தார் ஏற்பாடு செய்த கவி அரங்கத்தில் ஒலி பரப்பப் பெற்றதாகும்.
|