பக்கம் எண் :

மலரும் உள்ளம்143

ஏமாற்றம்

இரண்டு மாத விடுமுறையும்
இனிமை யாகக் கழிந்ததுவே.

பள்ளிக் கூடம் திறந்ததுவே,
பரீட்சை முடிவும் தெரிந்ததுவே.

"எட்டாம் வகுப்பைக் கடந்தோம்நாம்.
இனிமேல் பயமே இல்லை"யென

எண்ணிக் கொண்டே வீடடைந்தேன்,
என்றும் இல்லா மகிழ்வுடனே.

ஃ ஃ ஃ 

மறுநாள் பள்ளி செல்லுகையில்,
வழியில் உள்ள கடைதனிலே,

கண்டேன், அழகிய புத்தகமே,
காசைக் கொடுத்து வாங்கினனே.

வாங்கிப் படித்துக் கொண்டேநான்
மகிழ்வுடன் பள்ளி வந்தடைந்தேன்.