பக்கம் எண் :

மலரும் உள்ளம்159

மனித வேட்டை

காட்டில் உள்ள மிருகமெலாம்
   கூட்டம் ஒன்றைக் கூட்டினவாம்.
வேட்டைக் காரர் தொல்லைகளை
   விவர மாகப் பேசினவாம்.

“துப்பாக் கியினால் நம்மையெலாம்
   சுட்டுக் கொல்லும் மனிதர்களை
இப்போ தேநாம் பழிவாங்க 
   எழுந்திடு வோம்” எனப் புலிசொல்ல,

“இப்படி வாயால் பேசிடுதல் 
   எளிதே ஆனால், மனிதர்களை
எப்படிப் பழிநாம் வாங்குவதோ?”
   என்றே சிங்கம் கேட்டிடவே

குள்ள நரியும் முன்வந்தே
   கூற லானது சபைதனிலே:
“நல்ல யோசனை ஒன்றுண்டு.
   நான்இப் பொழுதே கூறிடுவேன்.