தவளையாரே
தத்தித் தத்தி ஓடிவரும்
தவளையாரே - கொஞ்சம்
தயவு செய்து நின்றிடுவீர்
தவளையாரே.
சுத்த மாகத் தினம்குளித்தும்
தவளையாரே - உடல்
சொறி சொறியாய் இருப்பதேனோ
தவளையாரே ?
பூச்சி புழு பிடித்துவரும்
தவளையாரே - உம்மைப்
பிடித்துப் பாம்பு தின்பதேனோ?
தவளையாரே.
மாரிக் காலம் வந்து விட்டால்
தவளையாரே - ஏனோ
வறட்டுக் கத்தல் கத்துகிறீர்
தவளையாரே?
|