பக்கம் எண் :

44மலரும் உள்ளம்

சிப்பா யாக நானிருந்தால்
   துப்பாக் கியுடன் இருந்திடுவேன்.
எப்போ தும்நான் துணிச்சலுடன்,
   எதிரிகள் ஓடச் செய்திடுவேன்.

போலீ சாக நானிருந்தால்
   பொல்லாத் திருடனைப் பிடித்திடுவேன்.
காலிச் சிறைக்குள் தள்ளிடுவேன்.
   கம்பி எண்ணச் செய்திடுவேன்.