பக்கம் எண் :

68மலரும் உள்ளம்

கரடி, சிங்கம், புலியை யெல்லாம்
   காண லாமே நம்மிடத்தே!
மிரள வேண்டாம், உள்ளே தள்ளி
   மென்று தின்று வீர ராக

ரொட்டி வாங்கிடுவாய் - தம்பி
ரொட்டி வாங்கிடுவாய்.

பிச்சை எடுத்துப் பிழைக்க வில்லை.
பிறரை ஏய்த்துத் திருட வில்லை.
இச்சை யோடு பாடு பட்டே
இங்கு நானும் விற்கும் இந்த

ரொட்டி வாங்கிடுவாய் - தம்பி
ரொட்டி வாங்கிடுவாய்.