பக்கம் எண் :

மலரும் உள்ளம்81

சுதந்திரத் திருநாள்

சொந்த மான நமது கொடியை
   ஏற்றிடு வோமே - அதைச் 
சுற்றி நின்று கூட்ட மாகப் 
   போற்றிடு வோமே.
இந்த நாளே அடிமை வாழ்வு 
   தொலைந்த தென்றுநாம் - ஒன்றாய்
எங்கும் முரசு முழங்கக் கொடியை 
   ஏற்றிடு வோமே.

வெள்ளை ஆட்சி முடிந்து போன 
   வெற்றி நாளிதே - நாம்
மேன்மை மிக்க சுதந்தி ரத்தைப் 
   பெற்ற நாளிதே!
வெள்ளை யோடு சிவப்பு, பச்சை 
   சக்க ரத்துடன் - நம்
வீட்டின் மீது கொடி பறந்து 
   நிற்கும் நாளிதே!