கார்த்திகைத் தீபம்
கார்த்திகைத் தீபமம்மா - எங்கும்
கண்டிடு வாயே அம்மா.
பார்த்திடப் பார்த்திடவே - உள்ளம்
பரவச மாகுதம்மா.
கூடங்கள் எல்லாமும் - அம்மா
கோபுர மேலேயும்
வீடுகள் யாவிலுமே - ஒளி
வீசுது பாராயம்மா.
சிப்பாய்கள் நிற்பதுபோல் - அதோ
தீப வரிசையம்மா,
எப்போதும் இப்படியே - இருந்தால்
இன்பம் பெருகுமம்மா.
திருவண் ணாமலையில் - கார்த்திகைத்
தீப தரிசனமாம்.
அருமை அருமையென்பார் - அங்கே
அவசியம் போவோமம்மா.
|