நான் குழந்தையானால்
சின்னஞ் சிறிய குழந்தையாய்
இன்று நானும் இருந்திடின்.
என்னை அம்மா தூக்கித் தூக்கி
இடுப்பில் வைத்துக் கொள்ளுவாள்.
சின்னஞ் சிறிய கன்னம் இரண்டும்
சிவக்கச் சிவக்கக் கொஞ்சுவாள்.
(சின்னஞ்)
நிலவைக் காட்டிக் காட்டி எனக்கு
நெய்யும் சோறும் ஊட்டுவாள்;
“உலகில் உன்போல் உயர்ந்த செல்வம்
உண்டோ?” என்றும் போற்றுவாள்.
(சின்னஞ்)
பொம்மை யெல்லாம் நிறைய நிறையப்
பிரிய மோடு வாங்குவாள்.
“தம்பி மோட்டார்! பார்பார்”என்று
சாவி கொடுத்தே ஓட்டுவாள்.
(சின்னஞ்)
|