பக்கம் எண் :

மலரும் உள்ளம்99

பிறைச்சந்திரன்

நறுக்கி எறிந்த நகத்தைப் போல
   இருக்கும் நிலாவே - நீ
நகர்ந்து நகர்ந்து போவ தெங்கே?
   சொல்லு நிலாவே.

ஓடம் போல வானில் ஊர்ந்து
   சொல்லும் நிலாவே - நான்
உன்மேல் ஏறிக் கொள்ள லாமோ?
   சொல்லு நிலாவே.

கொம்பைப் போலக் கூர்மை யாக
   இருக்கும் நிலாவே - என்னைக்
குத்திக் கீழே தள்ளு வாயோ?
   சொல்லு நிலாவே.

வில்லைப் போல வளைந்தி ருக்கும்
   வெள்ளை நிலாவே - நீ
வேட்டை யாட உதவு வாயோ?
   சொல்லு நிலாவே.