கையோடு கைகோத்து வாரீர்
கழகத்தோழர்களே ஒன்று சேரீர்
பொய்யோடு வந்தவர்
புரட்டோடு வந்தவர்
புறங்காட்டி ஓடினர் பாரீர்!
எந்தக் கொடுமைகள் வீழ்த்தும்?
எந்தத் தடைச்சட்டம் தாழ்த்தும்?
உந்தும் விடுதலை
வேட்கை உரிமைகள்
ஒற்றுமை கண்டே வாழ்த்தும்.
விடுதலை வாழ்வுநம் உரிமை
வேங்கைபோல் நீஎழு! அடிமை
கெடுதலை தூள் படும்
கீழ்மைகள் மாண்டிடும்
கீழ்அறுப்பதெந்த எருமை?
முன்னோர்கள் ஆண்ட இந்நாடு
முச்சங்க முத்தமிழ் ஏடு
பின்னாளில் வந்தேறிக்
கூட்டம் சுரண்டினும்
பிழைத்தது, இனியில்லை கேடு!
தீங்கரசுக் கென்ன ஆட்சி
திராவிடர் கைகொள்ளும் மாட்சி
ஓங்கிடும் ஐந்தாண்டில்
உண்மை மொழியிது
பெரியார் உழைப்புக்கில்லை வீழ்ச்சி!
உழைப்பால் வருவது வெற்றி
உரிமை விடுதலைப்பற்றி
அழைத்தது சங்கொலி
ஆர்த்தது முரசொலி
ஆட்சி அதிகாரம் முற்றி!
கண்ணில் கல்வி விளக்கேற்று,
கைத்தொழில் வாழ்வுக்கு நாற்று
மண்ணில் பொது நலம்
மாண்புடி தமிழரால்
மண்டிற்று என்றசொல் ஊற்று!
|
( 245 )
( 250 )
( 255 )
( 260 )
( 265 )
( 270 )
( 275 )
|