பக்கம் எண் :

திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்

அவையத்தார்

(அகவல்)

வருக வருகென மலர்க்கை கூப்பித்
திருமண மக்கட்கு உரியோர் எதிர்கொளத்
திராவிட நாட்டுப் பெருங்குடி மக்கள்
அரிவையரோடு வந்தமர்ந்தனர் நிறையவே!
குழலும் முழவும் பொழிந்த இன்னிசை
மழையை, நிறுத்திஓர் மறவன் எழுந்துதேன்
மழைபொழி வான்போல் மாத்தமிழ் சிறக்கத்
திராவிட நாட்டுப்பண் பாடினான்
ஒருபெரு மகிழ்ச்சி நிலவிற்று அவையத்தே




( 5 )
திராவிட நாட்டுப் பண்

இசை -- மோகனம் -- தாளம் -- ஆதி

(பல்லவி)

வாழ்க வாழ்கவே
வளமார் எமதுதி ராவிடநாடு
வாழ்க வாழ்கவே!

                          (சரணங்கள்)

சூழும் தென்கடல் ஆடும் குமரி
தொடரும் வடபால் அடல்சேர் வங்கம்
ஆழும் கடல்கள் கிழக்கு மேற்காம்
அறிவும் திறலும் செறிந்தநாடு (வா)

பண்டைத்தமிழும் தமிழில் மலர்ந்த
பண்ணிகர் தெலுங்கு துளுமலையாளம்
கண்டை நிகர்கன்னடமெனும் மொழிகள்
கமழக் கலைகள் சிறந்தநாடு (வா)

அள்ளும் சுவைசேர் பாட்டும் கூத்தும்
அறிவின் விளைவும் ஆர்ந்திடு நாடு
வெள்ளப் புனலும் ஊழித்தீயும்
வேகச்சீறும் மறவர்கள் நாடு (வா)

அகிலும் தேக்கும் அழியாக் குன்றம்
அழகாய் முத்துக் குவியும் கடல்கள்
முகிலும் செந்நெலும் முழங்குநன்செய்
முல்லைக்காடு மணக்கும் நாடு (வா)

அமைவாம் உலகின் மக்களை யெல்லாம்
அடிநாள் ஈன்ற அன்னை தந்தை
தமிழர்கள் கண்டாய் அறிவையும் ஊட்டிச்
சாகாத் தலைமுறை ஆக்கிய நாடு (வா)

ஆற்றில் புனலின் ஊற்றில் கனியின்
சாற்றில் தென்றல் காற்றில் நல்ல
ஆற்றல் மறவர் செயலில் பெண்கள்
அழகில் கற்பில் உயர்ந்த நாடு (வா)

புனலிடை மூழ்கிப் பொழிலிடை யுலவிப்
பொன்னார் இழையும் துகிலும் பூண்டு
கனிமொழி பேசி இல்லறம் நாடும்
காதல் மாதர் மகிழுறும் நாடு. (வா)

திங்கள் வாழ்க செங்கதிர் வாழ்க
தென்றல் வாழ்க செந்தமிழ் வாழ்க
இங்குத் திரவிடர் வாழ்க மிகவே
இன்பம் சூழ்ந்தே எங்கள் நாடு. (வா)
( 10 )







( 15 )





( 20 )






( 25 )





( 30 )





( 35 )





( 40 )




மணமக்கள் வருகை

மணமகள் தோழிமார் சூழவும், மணமகன்
தோழர் சூழவும் தோன்றி அவைதொழுது
"இருக்க" என்று தோழர் இயம்ப
இருக்கையில் இருவர் அமர்ந்தி ருந்தனர்.

 ( 45 ) 

முன் மொழிதல்


மன்னுசீர் மணப்பெண், மணமகன் சார்பில்
முன்மொழிந் தார்ஓர் முத்தமிழ் அறிஞர்;
"திராவிட நாட்டுப் பெருங்குடி மக்களே,
அருமைத் தோழியர் தோழரே அறிஞரே,
என்றன் வணக்கம் ஏற்றருள் வீர்கள்
இன்று நடைபெற இருக்கும்இத் திராவிடர்
புரட்சித் திருமணப் பெருங்கூட் டத்திற்குத்
தலைமை தாங்கவும், நிலைமை உயர
மணமகள் மணமகன் வாழ்க்கைஒப் பந்தம்
நிறைவேற்றவும் பெரியாரை
முறையில் வேண்டினேன் முன்னுற வணங்கியே



( 50 )





( 55 )




வழி மொழிதல்

அவையத் தாரின் சார்பிலோர் அறிஞர்
"முன்மொழிந்தாரின் பொன்மொழி
நன்றொப்புகின்றோம என்றார் இனிதே

( 60 )

வேண்டுகோள்

முன்மொழிந்தாரும் வழிமொழிந்தாரும்;
பின்னர்அப் பெரியார் இருப்பிடம் நாடி,
"எழுந்தருள கென்றே இருகை கூப்பி
மொழிந்து சீர்செய்து முன்னுற அமைந்த
இருக்கை காட்டத் தமிழ்ச்சொற்
பெருக்கைப் பெரியார் தொடங்கினர் நன்றே;-



( 65 )
                அவைத் தலைவர்

சேர சோழ பாண்டியர் வழிவரு
திராவிட நாட்டுப் பெருங்குடி மக்களே,
அருமைத் தோழியீர் தோழரே அறிஞரே,
தாங்கள் இட்ட பணியைத் தலைக்கணிந்து
ஈங்குச் சிலசொல் இயம்பு கின்றேன்;

ஆரியர் மிலேச்சர் ஆதலால், ஆரியத்து
வேரினர் 'பார்ப்பனர்; வேறினத்தவர்
ஆதலால், அவரின் வேத மந்திரம்
தீது பயப்பன ஆதலால், திராவிடர்
வாழு மாறு மனங்கொளார் என்பதும்,
தாழ இன்னலே சூழுவார் என்பதும்,
அன்றாட வாழ்வில் அறிந்தோம் ஆதலால்,
நம்மொழி, நம்கலை, நம்ஒ ழுக்கம்
நம்பேர் ஒட்பம் நடைமுறை மாய்க்கவே
தம்மொழி தீயதம் தகையிலா முறைளை
மணமுதல், திராவிடர் வாழ்க்கை முறைகளில்
இணைக்க அவர்கள் எண்ணினர் ஆதலால்
ஆரியர் பார்ப்பனர் அடா மண முறையை
வேரொடு சாய்க்க வேண்டும் அன்றே?

அமிழ்தைத் தமிழென்று பேசும் அழகிய
தமிழ்மண வீட்டில் உமிழத் தக்க
வடமொழிக் கூச்சலா? இன்பவாழ்வு
தொடங்கையில் நடுவில் சுடுநெருப்பா?

தாய் தந்தைமார் தவஞ்செய்து பெற்றனர்
தூய்பெருங் கிளைஞர் சூழ்ந்திருக்கின்றனர்
ஒருமனப் பட்ட திருமண மக்களைப்
பெரிதின்பம் பெறுக பெறுகெ என்று
வாய்க்கு மகிழ்வாய் வாழ்த்த இருக்கையில்
ஏய்த்திங்கு வாழுமோர் நாய்க்கென்ன வேலை?
ஊழி தொடங்கையில் ஒளிதொடங்கு மூவேந்து
வாழையடி வாழையாய் வந்த திராவிடர்
சூழ்ந்திங்கு இருக்கையிலே சூழ்ச்சி யன்றி
ஏதுங் கெட்டபார்ப்புக்கு இங்கென்ன வேலை?

நல்லற நாடும் நம்மண மக்கட்கு
கல்லான் கைப்படும் புல்லென் செய்யும்

மிஞ்சும் காதலர் மெய்யன்பு இருக்கையில்
கெஞ்சிப் பிழைப்போன் பஞ்சாங்கமேனோ

தீதிலா மிகப்பல திராவிட மறவர்
ஆதரவு இருக்கையில், அறிவிலான் படைத்த
சாணிமுண்டங்கள் சாய்ப்ப தென்ன?
கீ.ழ்நெறிச் சடங்குகள் கிழி்ப்ப தென்ன?
மணத்தின் மறுநாள் மணப்பெண் ணாளைத்
தண்கதிர்ச் செல்வன் புணரத் தருவதாம்
இரண்டா நாளில் இன்பச் செல்வியைக்
கந்தருவர்பால் கலப்புறச் செய்வதாம் தீஎனும் தெய்வம் மூன்றா நாளில்
தூயள்பால் இன்பம் துய்க்கச் செய்வதாம்
நாளாம் நாள்தான் மணமகன் புணர்வதாம்
திராவிட மக்களின் செவிஏற்குமோஇதை?
வைதிக மணத்தை மெய்என ஒப்பிடில்
தமிழர் பண்பு தலைசாயாதோ?

*தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழு தெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழைஎனப் பேசும்
திருவள்ளுவனார் திருநெறி மாய்ப்பதோ?
திராவிட புரட்சித் திருமணம்
புரிந்தின்புறுக திருமண மக்களே


( 70 )




( 75 )




( 80 )




( 85 )




( 90 )





( 95 )




( 100 )







( 105 )





( 110 )




( 115 )






( 120 )



வாழக்கை ஒப்பந்தம்

திராவிட நாட்டுப் பெருங்குடி மக்கள்
இருவர் தம் வாழ்க்கைஒப் பந்தம் இனிதாக-
நீவிர் சான்றாக-நிகழ்த்துவிக் கின்றேன் நான்

*தெய்வம் தொழாஆள்-தெய்வமெதையும் தொழ மாட்டாள்.
கொழுநன் தொழுது எழுவாள்-கொழுநனைத் தொழுத
படி துயிலெழுவாள். பெய்யெனப் பெய்யும் மழை-(அவள்
அக் கொழுநனுக்கு எத்தகையாள் எனில்) பெய் என்று வாழ்வார்.
கேட்கைநயில் பெய்கின்ற பயன் மழையாவாள் என்பது
இதன் பொருள்.

*பாவையீரே உங்கள் பாங்கில் அமர்ந்துள்ள
ஆடவர் தம்மை அறிவீரோ அன்னாரைத்
கூடிஉம் வாழ்க்கைத் துணையாகக் கொள்ள
உறுதி உரைப்பீரோ என்று வினவ
உறுதிஅவ் வாறே உரைத்தார் மகளாரும்
தோழரே பாங்கிலுள்ள தோழியரைத் தேர்ந்தீரோ
வாழுநாள் வாழ்க்கைத் துணையாகக் கொண்டீரோ
ஆயின் உறுதி அறிவிக்க என்னவே
தூயர்அவ் வாறே உறுதியும் சொல்லிட
வாழிய நீவிர்எனப் பெரியார் வாழ்த்தினார்!
வாழிய என்றவையுள் மக்களெலாம் வாழ்த்தினார்
தாரொன்றைத் தாங்கித் தம்கொழுநர்க்கே சூட்ட
நேரிழையார்க்கும் நெடுந்தாரவர் சூட்டக்
கையிற் கணையாழி கட்டழகியார் கழற்றி
துய்யமணவாளரைத் தொட்டணிய, அன்னவரும்
தம்ஆழி, மங்கையர்க்குத் தந்து மகிழ்ந்தமர்ந்தார்!
செம்மைப் பெரியார் அறமொழிகள் செப்புகின்றார்:

( 125 )





( 130 )





( 135 )




( 140 )




( 145 )




( 150 )
அறமொழிகள்

"அன்பும் அறனும்
உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும்
அது" என்றார், வள்ளுவனார்
இல்வாழ்வில் அன்பும்
அறமும் இருக்குமெனில்
நல்லதன்மை நல்லபயன்
நாளும் அடையுமன்றோ?

"மனைத்தக்க மாண்புடையாள்
ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத்
துணை" என்றார் வள்ளுவனார்!
வாழ்க்கைத் துணைவி
மனைக்குரிய மாண்புகொண்டு
வாழ்வில் அவனின்
வருவாய் அறிந்து
செலவு செயல் வேண்டும்
என்பது மன்றியும்
"தற்காத்துக் கொண்டான்
பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள்
பெண என்று சொல்கின்றார்
தன்னையும் தக்கபடி
காத்துக் கொளல்வேண்டும்
தன்கொழுநன் தன்னையும்
காத்திடல் வேண்டும்
சீர்சால் திராவிடர்
பண்பு சிதையாமல்
நேர்மை மறவாமல் நிற்பவளே பெண்ணாவாள்

மங்கலம் என்ப மனையாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு" பெறுக
"வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைபிரிதல் இல மற வாதீர்
"இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழு தேத்தும் உலகு" தெளிக.
மணமகளாரே, மணமகனாரே
இணைந்தின் புற்றுநன் மக்களை ஈன்று
பெரும்புகழ் பெற்றுநீ டூழி
இருநிலத்து வாழ்க இனிது.





( 155 )





( 160 )




( 165 )




( 170 )




( 175 )




( 180 )





( 185 )




நன்றி கூறல்

அறுசீர் விருத்தம்

மணமக்கட் குரியார் ஆங்கு
வாழ்த்தொலிக் கிடை எழுந்தே
மணவிழாச் சிறக்க ஈண்டு
வந்தார்க்கு நன்றி! இந்த
மணஅவைத் தலைமை தாங்கி
மணமுடித்தருள் புரிந்த
உணர்வுடைப் பெரியார்க் கெங்கள்
உளமார்ந்த நன்றி என்றே

கைகூப்பி, அங்கெவர்க்கும்
அடைகாயும் கடிது நல்கி
வைகலின் இனிதின் உண்ண
வருகவென அழைப்பா ரானார்
பெய்கெனப் பெய்த இன்பப்
பெருமழை இசையேயாக
உய்கவே மணமக்கள் தாம்
எனஎழும் உள்ளார் வாழ்த்தே





( 195 )





( 200 )




( 205 )