வானுக்கு நிலவு வேண்டும்
வாழ்வுக்குப் புகழ் வேண்டும்
தேனுக்குப் பலாச்சுளை வேண்டும்-என்
செங்கரும்பே நீ எனக்கு வேண்டும்?
மீனுக்குப் பொய்கை வேண்டும்
வெற்றிக்கு வீரம் வேண்டும்
கானுக்கு வேங்கைப்புலி வேண்டும்-என்
கண்ணாட்டியே நீ எனக்கு வேண்டும்!
வாளுக்குக் கூர்மை வேண்டும்
வண்டுக்குத் தேன் வேண்டும்
தோளுக்குப் பூமாலை வேண்டும்-அடி
தோகையே நீ எனக்கு வேண்டும்!
நாளுக்குப் புதுமை வேண்டும்
நாட்டுக்கே உரிமை வேண்டும்
கேளுக்கே ஆதரவு வேண்டும் -அடி
கிள்ளையே நீ எனக்கு வேண்டும்!
|
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
|