குறிஞ்சித்
திட்டு
பிரிவு -- 41
|
( தரும இல்லத்தில் தமிழ்ச்சுவையும்
இருந்தது. பல தீச் செயல்கள்
நடைபெற்றன. )
(அறுசீர் விருத்தம்)
கூடமோர் ஆடரங்கு!
கொடியிடை துவளும் வண்ணம்
ஆடுமோர் அல்லி காற்றால்
ஆடுமோர் அலரிக் கொம்பு!
பாடுமோர் குறிஞ்சிப் பாட்டுத்
தமிழ்மேன்மைக் கெடுத்துக் காட்டு!
வாடுங்கால் கலைநுகர்ந்து
மகிழ்ந்தது தரும இல்லம்!
ஆடலும் முடிந்த பின்னர்
அனைவரும் கள்ளை மொண்டார்!
ஓடையில் பிடித்து வந்து
பொரித்தமீன் உண்டார் சில்லோர்!
ஓடியே ஆட்டி றைச்சி
சிவாநந்தர் மகிழ்வாய் உண்டார்!
சாடிக்கள் தலைக்கறிக்கே
தக்கதாம் சம்பந்தர்க்கே!
கவலையை புறத்தில் தள்ளிக்
கள்ளிலே மனத்தைத் தள்ளிச்
சுவைகாண்பார் தம்மில் ஓர்பெண்
துயர்வாய்ந்த முகத்தா ளாகி
அவைக்கொரு புறத்தில் குந்தி
இருந்தனள்; அவளை அந்தச்
சிவாநந்தர் திரும்பிவந்து
திருப்பினார, மலர்முகத்தை!
திருமாலுக் கடிமை அங்கோர்
திருக்குடத் திருக்கள் எல்லாம்
திருவாய்க்குள் சேர்த்தாராகித்
திருமண்ணில் கவிழ்த்து வைத்துத்
"திருவேங்க டத்தோய்! உன்றன்
திருவருள் வேண்டி நின்றேன்.
திருக்கள்ளுக் குடமாய் உள்ள
திருமாலே அருள்வாய்." என்றான்.
"தழையாக்கிப் பூவும் ஆக்கிச்
சாலைகள் சோலை ஆக்கிக்
கழையாக்கும் திருமா லேநீ
கருந்தேள்போல் கடுக்கும் கள்ளை
மழையாக்கி என்றன் வாயை
மடையாக்கி அருள் புரிந்தால்,
பிழையாக்குவாரோ உன்றன்
பெருமையை" எனக்கும் பிட்டான்!
"உளமாக்கி, உயிரை ஆக்கி,
உயர்ந்திடும் ஆசை ஆக்கி,
வளமாக்கி, வாயும் ஆக்கி,
வாங்கிடக் கையுமாக்கி,
இளமாதர் தம்மை ஆக்கும்
என்கண்ணா! புளித்த கள்ளைக்
குளமாக்கி என்றன் வாயைக்
குடமாக்கி அருள்வாய என்றான்;
அழைத்தஅச் சிவாநந் தன்மேல்
அசைந்துவீழ்ந் தெழுந்து, வேறு
கொதித்தஓர் காளை யின்தோள்
குலுக்கினான் அதேநே ரத்தில்
உழைப்பாளர் தலைவ னான
செழியனங் கோடி வந்து
"விழற்காடே! வெறிபிடித்த
விநோதையே!" எனப்பிடித்தான்!
பிடித்தஅப் பிடியைத் தள்ளி
"என்பெயர் அல்லி" என்று
முடித்தாளாய் ஓர்அறைக்குள்
முன்ஓடிப் புகமு யன்றாள்.
படித்தாளாய் அங்கி ருந்த
பாவையாம் மடவார் தோழி
இடித்துத்தள்ளிட விநோதை
எதிர்நின்ற கூடம் சேர்ந்தாள்!
கூடத்தில் விநோதை யாளின்
முக்காடு குலையச் செய்து
"ஓடிப்போ நாயே!" என்று
கீழ்த்தள்ளி உதைத்துச் சென்றான்:
ஈடற்ற செழியன்! மங்கை
எழுந்தனள் அறைக்குச் சென்றாள்.
மாடப்புறாபோல் அங்கே
இருந்தனள் மடவார் தோழி!
விநோதைதன் இடுப்பி னின்று
வெடுக்கெனச் சுழல்துப்பாக்கி
தனைத்தூக்கிச் சுட்டுத் தீர்த்தாள்.
தலைசாய்த்த மடவார் தோழி,
அனல்மனப் பார்ப்பால் சுட்ட
அண்ணலாம் காந்தி ஆனாள்!
மனம்பட்ட அச்சம் அங்கே
வானையே நடுங்கச் செய்யும்!
பழுபனை மட்டை வாலில்
பசங்கள்தாம் கட்டி விட்ட
கழுதைபோல் விநோதை ஓடி
அரண்மனைக் கதவை மூடி
விழிதுயில் அரசன் மேலே
விழுந்தனள், அவன்விழித்தே,
"அழைத்தேன்முன் உன்னை" என்றான்!
"அதற்குத்தான் வந்தேன்,' என்றாள்!
அரசன்பால் வழக்கு ரைக்க
வந்தனர் சிலபேர், அங்கே
அரசனும் அமைச்சன் தானும்
அவைஉறுப் பினரும் கூடி
"உரைப்பீர்கள் வழக்கை" என்ன!
உரைக்கின்றார், "மடவார் தோழி
இரவொரு மங்கை யாலே
இறந்தனள். அந்த மங்கை;
இவ்வரண் மனையில் வந்து
புகுந்தனள்; வியப்பீதன்றோ?
செவ்விதின் அவளைத் தேடி,
ஒறுத்தலும் செய்ய வேண்டும்.
ஒவ்வாத செயலால் எங்கள்
ஒருமகன் மனைஇ ழந்தான்.
அவ்விளையோன் இழப்புக்
காயிரம் பொன்னும் வேண்டும்!"
என்றனர் அமைச்சன், "அவ்வா
றியற்றிய கொடியாள் எங்கே?
நன்றாக அரண்மனைக்குள்
தேடுக!" எனநவின்றான்.
சென்றார்கள் பல்லோர். அந்தத்
தீயாளைத் தேடினார்கள்.
வந்தாள்அவ் விநோதை அங்கே,
மன்னன்பால் உரைக்கலானாள்;
"அல்லியை மடவார் தோழி
முக்காட்டை அகற்றி மானம்
இல்லாமற் செய்ததாலே,
எரிச்சலால் சுட்டுக் கொன்றாள்.
நல்லதோர் அல்லி என்பாள்
என்னிடம் அதைநவின்றாள்.
வல்லிநான் அன்னவட்கு
மன்னிப்பும் தந்து விட்டேன்!
"முடிந்தது வழக்கு; மற்றும்
முறையீடு செல்லா திங்கே!
கடிந்தொன்றும் பேச வேண்டாம்.
கடைகட்டிப் போவீர என்றாள்.
மடிந்தவள் உறவினோர்கள்
மன்னனின் முகத்தை நோக்க,
"முடிந்தது வழக்கு; மற்றும்
முறையீடு செல்லா" தென்றான்!
"ஆட்சியும் உண்டா நாட்டில்?
அறங்காக்க ஆள்தான் உண்டா?
மாட்சிமை யுடைய மன்னர்
வழிவந்தும் அழிவைச் செய்யும்
காட்சியும் கண்டோம் மக்கள்
கண்ணீரைக் கண்டோம் மக்கள்
மீட்சிதான் என்றோ?" என்று
விளம்பினார் உளம்பதைத்தே!
தெருவெலாம் அழுத கண்ணீர்
சிந்திற்றுத் தெருவா ரெல்லாம்
வெருவியே என்ன என்று
வினவினார். நிலைஅறிந்தார்.
பெருவியப் படைந்தார். நாட்டின்
பேரழிந் ததுவோ!" என்றார்
அருகினில் தம்பிரானும்,
சொல்லிய அனைத்தும் கேட்டான்;
அளவிலா வருத்த முற்றான்.
அளவிலாச் சினம டைந்தான்.
தளிர்மேனி இளமை கொண்ட
தையலாள் தரும இல்லக்
களியாட்டில் கண்ட தெல்லாம்
கண்டிராச் செய்கை என்று
குளிரிதழ் அல்லியின்பால்
கொடுஞ்சினத்தோடு சென்றான்.
"இரவினில் மடவார் தோழி
என்பவள் உன்னா லன்றோ
ஒருகுண்டால் கொல்லப் பட்டாள்!
ஒழிந்தனள் அன்றோ மங்கை?
தருமஇல்லத்தை நீயேன்
சார்ந்தனை, மான மின்றி!
அரண்மனை செல்வ தாக
அறிவித்தாய என்று கேட்டான்!
"மெல்லாடை முள்ளில் பட்டால்,
மெதுவாக வாங்க வேண்டும்;
பொல்லாதாள் செல்வாக் கில்லம்
புகுந்திட்டோம், மீள்தற்கு
நல்லதோர் காலம் வேண்டும்;
வரும்வரை நாம்அவட்கு
நல்லவர் போல்நடத்தல்
நம்கடன் அன்றோ அத்தான்!
"தேங்கிய பள்ளத் தண்ணீர்
திடீரென்று வற்றும்! மங்கை
தாங்கிய அதிகாரந்தான்
சரியில்லா தெனினும், அற்றுப்
போங்காலம் விரைவிற் காண்போம்.
பொறுத்திருக்கத்தான் வேண்டும்.
ஓங்கியோர் அடியில் பாம்பை ஒழித்தல் மேல்! எழுப்பல் தீது!
"தீமைசெய் திடுதல் கண்டும்
சென்னையில் பார்ப்பானைப்போய்
சாமியென் றுரைக்கும் மக்கள்
தன்மைபோல் படைவீரர்கள்
ஆமைபோல் அடங்கு கின்றார்.
அரசனின் தீமை கண்டும்.
காமாலைக் கண்ணர் மக்கள்!
கரிப்பொடி மஞ்சள் என்றார்!
"தொண்டர்கள் தொண்டு செய்வார்.
தொழும்பர்கள் அதைஎ திர்ப்பார்.
மண்டுகள் திருந்து கின்றார்
மதியுளார் பெருகு கின்றார்
கண்டவர் காணார்க் கெல்லாம்
குறிஞ்சியின் நிலைமை கூறிப்
பண்டைய நிலையில் நாட்டைப்
பார்த்திட அவாவுகின்றார்.
"மணியோசை கேட்டோம். யானை
வருவது மெய்யே அன்றோ?
தணிவது மெய்யே, மக்கள்
தணியாத துன்பம் எல்லாம்.
பிணியில்லை மூப்பு மில்லை
பெற்றவள் செந்தமிழ்த்தாய்.
அழியாத ஒழுக்கத்திற்கோர்
அழிவில்லை உரிமை வந்தால்!
"தருமஇல் லத்துக் கேதான்
தவறாமல் வருதல் வேண்டும்.
வருவது மட்டு மின்றி
வந்தவர், மகிழும் வண்ணம்
அரும்குறிஞ்சிப்பண்பாடி,
ஆடவும் வேண்டு மென்று,
பெரியதோர் ஆணை யிட்டாள்.
மறுத்துநான் பேச வில்லை.
"ஆடலும் முடிந்த தங்கே;
விநோதையும் முக்கா டிட்டு
வாடிய முகத்தா ளாகி
வந்தனள் வந்தா னங்கே
தேடிய சிவாநந் தன்தான்,
திருப்பினான் அவள் முகத்தை!
ஓடினாள் சம்பந்தன்பால்
செழியனங் கோடி வந்தான்!
"முக்காட்டை நீக்கப் போனான்.
'அல்லிநான்' எனமொ ழிந்தே
அக்கட்டில் அறையிற் செல்ல
அங்குள்ள மடவார் தோழி,
'இக்கட்டில் வராதே' என்றே
எற்றினாள்! விநோதை கொண்ட
முக்காட்டை விலக்கிக் காலாற்
புடைத்தனன் செழியன்! சென்றாள்.
"தலைஇன்னாள் என்று காட்டத்
தள்ளிய மடவார் தோழி
யினைச்சுட்டு வீழ்த்தி விட்டாள்,
எதற்குமஞ்சா விநோதை.
அனற்காட்டில் குளிர்காய் வார்போல்
ஆடலை முடித்து வீட்டில்
உனைக்கண்டேன் வந்து மாமா!
இதுவன்றோ உண்மை!" என்றாள்.
"ஆடலும் இனிமேல் வேண்டாம்;
அத்தீயர் நடுவில் சென்று
பாடலும் வேண்டாம். அந்தப்
படுகாலி இனிஅ ழைத்தால்,
'வாடிய துடம்பு! மெய்யாய்
வயிற்றிலும் வலியே!' என்று,
போடொரு போடு நீதான என்றுதம் பிரான்புகன்றான்.
|
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
( 25 )
( 30 )
( 35 )
( 40 )
( 45 )
( 50 )
( 55 )
( 60 )
( 70 )
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
( 95 )
( 100 )
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
( 130 )
( 135 )
( 140 )
( 145 )
( 150 )
( 155 )
( 160 )
( 165 )
( 170 )
( 175 )
( 180 )
( 185 )
( 190 )
( 195 )
( 200 )
( 205 )
( 210 )
( 215 )
( 220 )
( 225 )
( 230 )
( 235 )
( 240 )
( 245 )
|
கடற்கரை
தனைஅடுத்துக்
கட்டிய பெருமன் றத்தில்,
தடுத்திட்ட ஆற்று வெள்ளம்
ததும்பிட நின்ற தைப்போல்,
உடுத்திய மக்கட் கூட்டம்
ஒன்றினைக் காட்டிச் சில்லி
அடுக்கிடு கின்றான் சொல்லை
அனைவரும் மகிழும் வண்ணம்;
"தோழியீர், தோழன் மாரே!
சொற்பெருக்காற்றி நாட்டை
வாழவைத் திடுவாய் என்று
மங்கைஅவ் விநோதை சொன்னாள்
ஏழையான் மறுப்பே னானால்,
யான்படல் நாய்படாது
தோழியீர், தோழன் மாரே!
தொடங்குவேன் சொற்பெருக்கை;
"மன்னரும் விநோதை தானும்
மகிழ்ச்சியால் வாழ வேண்டும்
இன்னலை நாட்டு மக்கள்
இன்பமாய்க் கொள்ள வேண்டும்.
மன்னர்பால் படைகள் உண்டு,
மக்கள்பால் என்ன உண்டு?
புன்மைபேசாமல் மக்கள்
புற்றுப்பாம்பாக வேண்டும்.
"அரசரின் தீயொழுக்கம்
அரசியைக் கொன்ற தென்று
ஒருசிலர் சொல்லும் சொல்லில்
உண்மையே சிறிதும் இல்லை!
அரசியின் தலையில் முன்பே
அப்படி எழுதி வைத்த
ஒருவனை வெறுக்க வேண்டும்;
மன்னனை வெறுத்தலுண்டோ?
"அரசியார் இறந்தார் என்ற
சேதியை அறிந்தாராகித்
திருவிளா மாவட்டத்துத்
திண்ணனும் இளைய வேந்தும்
வரும்போது, விநோதை தானும்
வாய்வல்ல குமுதம் தானும்
மருந்திட்டுக் கொன்றார் என்று
மக்களிற் சிலர்சொல்கின்றார்,
"சேல்விழி விநோதை என்றன்
செல்வனை காதலித்தாள்
ஏலவே அவனிடத்தில்
இன்பமே அடைந்து தீர்த்தாள்.
மேல்ஒரு நாள்அப் பையன்
அதையெலாம் வெளியிற் சொன்னான்
பாலிலே நஞ்சை இட்டுப்
படுகொலை செய்தாள் என்பர்.
"இதைஎலாம் நம்ப லாமா?
இப்படி இனிச்செய் தாலும்
அதைஎலாம் மக்கள் யாரும்
அறிவிலா மக்கள் யாரும்
அதுவரை செய்து தீர்ந்த
தீமையை எடுத்துச் சொல்வார்.
அதையெலாம் நம்பலாமா?
நம்பினால் ஆவதென்ன?
"கோயிலைப் பெரிதாய்க் கட்டிக்
கொழுக்கட்டைப் பாவை வைத்து;
வாயினால் வேண்டச் செய்து
மறையவன் தன்னை அங்கே
நாயைப்போல் குலைக்கச் சொல்லி
நமைக்கூலி கொடுக்கச் சொன்னாள்.
ஆயவை அனைத்தும் மக்கள்
அழிவுக்கா செய்து வைத்தாள்?
"அரசியாற் செல்வ மெல்லாம்
அரோகரா ஆயிற்றென்றால்
வருநூற்றாண் டுக்கும் பின்னும்
வராமலா போகும்? நாட்டில்
அரிசிக்குப் பஞ்சம் என்றால்,
அனைவரும் ஒழிந்தா போனார்?
இருக்கின்றோம் சாக வில்லை
இதையாரும் நம்ப வேண்டும்.
"விநோதைதான் சேந்தனாரை
விரும்பினாள். 'ஒப்பேன்' என்றார்
தனதுமன்னவனைக் கொண்டு
தணலிடை வேக வைத்தாள். இனையதோர் செய்தி கேட்டோர்
எல்லாரும் அழுதாரென்றால்,
விநோதையும் அழுத துண்டோ?
வீணுக்கேன் புளுக வேண்டும்?
"நான்சொல்லி வந்த தென்ன?
சுருக்கமாய் நவிலுகின்றேன்.
தேன்கேட்கும் வண்டு! பிள்ளை
தின்னக்கேட்கும் வெண் கொக்கு
மீன்கேட்கும், குரங்கு வாழைப்
பழங்கேட்கும் விநோதை தன்னை
ஏன்கேட்க லாகா திங்கே
இருகையை நீட்டிச் சோற்றை!
"தலைவனால் எறியப் பட்ட
தனித்தவேல் பாய, நெஞ்சு
குலையாத குலைநாய் சற்றும்
குலையாமல் வாலை யாட்டும்.
விலையிலா மாணிக்கத்தாள்
விநோதைதான் உதைத்திட்டாலும்;
குலையாமல் உதைத்த காலுக்கு
ஒருமுத்தம் கொடுக்க வேண்டும்!'
என்றொரு நகைச்சு வைதான்
எழுந்திடப் பேசும் போது,
நின்றொரு தோழன் கேட்டான்;
"எம்நலம் குறித்த பேச்சா?
மன்னரின் நலம்குறித்த
பேச்சாநீர் நவின்ற தெல்லாம்?''
என்றனன். சில்லி "என்பேச்சு
இருபாலும் மகிழ்வதென்றான்.
"விநோதைக்கும் உனக்கும் ஏதோ
பகையென விளம்பு கின்றார்,
எனிலது மெய்யா?" என்றான்
இன்னொரு தோழன்! சில்லி,
"தனிப்பகை பொதுவில் காட்டல்
தகைமையே அல்ல" என்றான்.
"இனிப்பகை வருமோ?" என்றான்.
"இனிப்பகை இனிப்பே!' என்றான்.
"இன்னுமோர் சொல்லைச் சொல்லி,
என்னுரை முடிப்பேன் கேளீர்?
மன்னனை ஆத ரிப்பீர்,
விநோதையை மறக்க வேண்டாம்!"
என்றனன், சென்றான் அங்கே.
இருந்தவர் கைகள் கொட்டிப்
"பொன்னான சில்லி பேச்சில்
பொதுநலம் மிகுதி" என்றார்!
|
( 250 )
( 255 )
( 260 )
( 265 )
( 270 )
( 275 )
( 280 )
( 285 )
( 290 )
( 295 )
( 300 )
( 305 )
( 310 )
( 315 )
( 320 )
( 325 )
( 330 )
( 335 )
( 340 )
( 345 )
( 350 )
( 355 )
( 360 )
( 365 )
|
( செழியன் மேல் நினைவு )
(அகவல்)
மாலையில் குளிர்த்த சோலையில் விநோதை
ஆலை உருளையின் கரும்புபோல் அகமொடிந்து,
'செழிய னன்றித் தேற்றுவாரில்லை.
விழியின் எதிரில் விளையாடு கின்றான்.
நினைப்பினைக் கவர்ந்தான் நிறைந்த அன்பினன்.
எனக்கென்று வாய்த்த இன்ப மணாளன்,
இந்த மாலையில் அந்தச் செழியன்,
என்றன் தோளில் எழிற்றோள் சாய்த்துத்
தன் அன்பு சேர்ந்த தமிழ்ச்சொல் ஒன்று
சொல்லக் கேட்டால் தொல்லை போ'மென,
எண்ணிப் பெருமூச் செறிந்தாளாகி,
அண்மையி லிருந்த அல்லியை அழைத்தாள்.
"செழியனை அழைத்ததாகச் சொல்லுக,
வழிபார்த் திருப்பேன் விரைவில் வருக!"
என்றாள். அல்லி ஏகினாள் பின்னும்
அங்கு வந்த சில்லியை அழைத்துச்
"செழியனைக் கெணர்க!" என்று செப்பினாள்.
நல்ல தென்று நடந்தான்
பொல்லாப் பசியினள் போன்றாள் விநோதையே!
|
( 370 )
( 375 )
( 380 )
|
( சில்லியின்
எண்ணம். )
(அகவல)
செழியனைத் தோழர் சில்லோர் கண்டு,
சில்லியின் சொற்பொழிவு சொல்லி இருந்தனர்.
'சில்லி அஞ்சு கின்றான் சிலநாள்
செல்லு மாயின் திருந்துவான்; அவன்தான்
விநோதையின் பகைவன்; மேலுக்குத் தன்னை
விநோதையின் நண்பனென்று விளம்பு கின்றான்."
என்றுகூறி, "இருங்கள் வருவேன
என்று வீட்டினுள் ஏகினான்; அல்லியும்,
சில்லியும் அங்குச் சேர்ந்தனர். சில்லி
இருக்கும் தோழர்பால் இயம்பு கின்றான்;
"எங்கே செழியனார்? அங்கே சோலையில்
அரசி விநோதை அழுதிடு கின்றாள்.
அழுகையால் அவளின் விழிநீர் நிலத்தில்
விழும்நிலை அடைந்தது. விரைவில் செழியனார்
வந்தால் நிலைக்கும் வஞ்சி யின்னுயிர்
உட்சென்று நீவிர் ஒருசொல் சொன்னால்
சட்டென்று வரவும் சரிப்படும்!" என்றான்.
அதற்குள் செழியன் அங்கு வந்தான்.
"தனிமையிற் பேசுதல் தக்கது. சற்றே
அருள்கூர்ந்து நீவிர் அமைக!" என்றான்.
ஒப்பினான் செழியன். "உங்கள் காதலி
உடனே உன்னரும் உயிர்க்கு மருந்தாய்
உடனே அழைத்து உடனே வரும்படி
என்னை உடனே அனுப்பினாள் சோலையில்
புன்னை அருகே புதுக்கிய திண்ணையில்
காத்திருக் கின்றாள என்று கழறினான்.
"பார்க்கின் றேன்என்று பகர்வாய்!" என்று
செழியன் சொல்லச் சில்லி நடந்தான்!
அல்லியும் சென்றாள். அங்குள்ள தோழர்கள் செழியனை நோக்கிச் செப்பு கின்றனர்.
'நச்சும் நம்தாய் நாட்டு வாழ்வின்
அச்சை முறிக்கும் விநோதையின் அழகு
விலைக்குவாங்கிற்றா உன்னை? விடுதலை
குலைக்கும் கொடிய கோடாரிக் காம்பே
போ!" எனப் பேசிப் போனார் தோழர்.
செழியன் வருவதோர் பழியையும் அவளைவிட்
டொழிவதால் வருவதோர் ஓயாத துன்பையும்
எண்ணி உலவி இருந்தான். விநோதையின்
வெண்ணிலாமுகம், சிரிப்பு விழிஇவை
மண்ணிலாருக் குவரும் என்று.
நண்ணினான் விநோதை நண்ணிய சோலைக்கே!
|
( 385 )
( 390 )
( 395 )
( 400 )
( 405 )
( 410 )
( 415 )
( 420 )
( 425 )
|
விநோதையின் சூழ்ச்சி
தத்தும் தவளையாய்த் தாவிச் செழியன்மேல்
தொத்தினாள், தோகை அழுதாள். "துடித்தேன்
ஏன்மறந்தீர என்றாள் உடன் அணைத்துத்
தான்முந்தித் தந்த தனிமுத்தம் ஒன்றுக்குப்
பத்தாகப் பெற்றாள்; ஓடிப் பாவைக்கே நீநாளும்
ஒத்துவந்தால் ஆவி உலகில் இருக்கும்.
வெறுத்தால் உயிரும் வெறுக்கும் இனிமேல்
பொறுப்பதில்லை. நாமிருவர் பூப்போல் மணம்போல்
இருள்மாற்றும் இன்ப நிலைபோல் குளிர்போல்
ஒருமித்தல் வேண்டும் எனக்கும் அவனுக்கும்
திருமணம் என்னுமொரு திட்டமுண்டு. நான்என்
ஒருமனத்தை உன்மேல் வைத்தேன்; உறுதியிது.
பூணாக் குரங்குக்குப் பூமாலை நான் என்றால்,
வீணாய் இறைத்த விழலுக்கு நீரன்றோ?
என்மாசுக் காக எனைவெறுத்தல் இல்லாமல்
பொன்மாசு தீர்க்கும்ஒரு பொற்கொல்லன்போல்
என்னை மணக்க இசைந்திடுதல் வேண்டும். இனி
மன்னன் ஒருமனத்தை மாற்றும் வகைதன்னை
நான்புரிவேன் வாரீர் அறைக்கெ''ன்ற மங்கையுடன்
தேன்புரியும் தாரான்சென்றான்! |
( 430 )
( 435 )
( 440 )
( 445 )
|
|
|
|