Untitled Document
28. | | புல்லும் பசுவிற்காம்; பூண்டும் மருந்திற்காம்; கல்லும் திருக்கோயில்கட்டுதற்காம் - தொல்லுலகில் ஏழை எளியேன் எதற்காவேன்? செந்திநகர் வாழும் வடிவேல வா! |
29. | | முத்தையா! வேலா! முருகா! எனவோதும் சொத்தையே தேடிச் சுகமடைவீர் - நித்தமிவ் வீடும் களமும் விளை நிலமும் தோப்புகளும் மாடும் சதமாகு மா? |
30. | | பெற்ற சுதந்திரத்தைப் பேணி வளர்க்கநமக்கு உற்ற துணையாய் உதவுகவே! - வெற்றிதரும் ஈராறு கையன் இமையோர் சிறைமீட்ட வீராதி வீருன்செவ் வேல். |
31. | | செந்தில் முருகா! திருமால் மருகா! என் சிந்தை குடிகொண்ட தேசிகா!- வந்தினிய பைந்தமிழ்ச் சோலையிலே பாடும் கவிக்குயில்கள் சந்ததம் வாழவரம் தா. |
32. | | நாட்டு வைத்தியனும் நாளைக் கடத்துகிறான் வீட்டி லுள்ளோரும் விசனப் படுகின்றார் காட்டு மயில் மீது ககனம் சுற்றியவா கூட்டிச் செல்லையா கூவிட வலிமையில்லை |
33. | | தென்னெல்லை காத்தாளும் தேவி! குமரீ! நின் பொன்னடியைக் கும்பிட்டுப் போற்றுகின்றேன் - மன்னு புகழ்ச் செந்தமிழ் நாடு ஒன்றாகித் தேவர்நா டொத்து, உலகில் சந்ததம் வாழவரம் தா. | |
|
|