முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 11 |
Untitled Document
34. | | நாடிப் புலங்கள் உழுவார் கரமும், நயவுரைகள் தேடிக் கொழிக்குங் கவிவாணர் நாவும், செழுங்கருணை ஓடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சும், உவந்துநடம் ஆடிக் களிக்கும் மயிலே! உன் பாதம் அடைக்கலமே, |
35. | | வெள்ளைக் கலையுடுத்து, வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் - பிள்ளைமொழி வெள்ளைக் கவிகண்டு, வெள்ளையென் றெண்ணாமல், உள்ளத்திற் கொள்வாள், உவந்து, |
36. | | பொருளற் றவர்க்கிங் வுலகில்லை என்றிப் புவிபுகழும் தெருளுற்ற ஞானிஅப் பொய்யா மொழியில் தெரிந்துரைத்தான்; மருளுற்ற மாந்தரும் வற்றாத செல்வம் இவ் வையகத்துன் அருளுற் றலா தடை வாரோ? செந் தாமரை ஆண்டவளே! |
37. | | சித்தம் தெளிந்திடும், செய்வினை யாவும் திருத்தமுறும், நித்தம் மறிந்தெழு செல்வமும் தங்கி நிலைபெறம், நல் முத்தர்க் குரிய பெரும்பதம் வாய்க்கும், இம் மூதுலகில் பத்தர்க் கருளுந் திருமகள் பாதம் பணிபவர்க்கே. | |
|
|