Untitled Document
646 | | பார்ப்பார்கள் தோள் சுமந்து பாணரைமுன் திருக்கோயில் சேர்த்தார்கள் என்ற கதை தெரியாதோர் உண்டோ? ஐயா! |
647 | | கள்ளுடனே ஆடுகோழி கலந்துண்ணும் காளிதேவி உள்ளிருக்கும் கோயிலே உரிமைஎமக் கிலையோ? ஐயா! |
648 | | கள்ளுடனே ஆடுகோழி கலந்துண்ணும் காளிதேவி பள்ளர் எமைக் கண்டவுடன் பயந்தோடிப் போவாளோ? |
649 | | காப்பாற்றி நமையாளும் கடவுளரும் மக்களுள்ளே பார்ப்பார்கள் பறையரென்ற பகுப்பேதும் வைத்ததுண்டோ? |
650 | | கோவிலிலே தீட்டேறிக் குடிபுகுமோ? குளிப்பவரின் பாவமெல்லாம் கங்கையிலே படிந்திடுமோ; கூறம், ஐயா! |
651 | | பூவாரம் அணிந்தபிரான் பொன்னடிக்கீழ் நின்றெளியேம் தேவாரம் பாடில் அவர் செவிக்கின்பம் ஆகாதோ? |
652 | | பாவிகளை ஈடேற்றிப் பதம்அளிக்கும் பரமசிவம் கோவிலிலே எமைக்கண்டால் குடிமுழுகிப் போய்விடுமோ? |
653 | | காணுதற்குப் கண்அளித்த கடவுளடி கண்டுதொழ வேணுமென்று மனிதருக்கும் விருப்பமெழல் அதிசயமோ? | |
|
|