முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 105 |
Untitled Document
655 | | அண்டம்எல்லாம் காக்கும் ஈசன் ஆலயத்தில் மக்கள் எம்மைக் கண்டகண்ணைக் கழுவுவரோ? கருணைசெய்ய மாட்டாரோ? |
656 | | தருமஉரு வாம்ஈசன் தமியரையும் கண்டவுடன், கருணைவிழி அடைப்பாரோ? கனல்விழியைத் திறப்பாரோ? |
657 | | குற்றமிலா எமைக்கண்டு கோயிலையும் அடைக்கலாமே? பெற்றவரைக் காணவரும் பிள்ளைகளைத் தடுப்பார் உண்டோ? |
658 | | ஆண்டவனைக் கண்டுதொழ ஆசைஎமக் கெழுந்திடாதோ? நீண்ட மரஞ்செடியோ? நாங்கள் நெடும்பாறை தானோ? ஐயா! |
659 | | பக்தியொடு கோயில்சென்று பணிந்துபதம் பெறுவோமேல், முத்தியிடம் போதாமல் முழுமோசம் வந்திடுமோ? |
660 | | வனத்தில் ஒரு மரமாக வளர்ந்தோமிலை, மானிடரின் இனத்தினிலே பிறந்தஇடர் இனிப்போதும், போதும், ஐயா! |
661 | | தாகம்என்று வருபவர்க்குத் தண்ணீரை அளியாமல், ஆகமங்கள் ஓதிநிற்றல் அழகாமோ? அறமாமோ? |
662 | | ஆலயத்திற் சென்றுதொழ ஆணையிடும் ஒளவைமொழி ஞாலமிசை எங்களுக்கும் நன்மைதராப் புன்மொழியோ? | |
|
|