Untitled Document
663 | | ஆவுரித்துத் தின்பரேனும் அரனடிக்கீழ் அன்பர்எனில் தேவர்அவர் என்றுரைக்கும் திருமொழியும் வெறுமொழியோ? |
664 | | சாதியினால் குறைவில்லை; தாழ்ந்தவரும் பத்தியினால் வேதியரிற் பெரியர் என விளம்புமொழி வீண்மொழியோ? |
665 | | சண்டாளர் ஆனாலும் சக்கரத்தான் அடியவரேல், கொண்டாடத் தக்கோர் எனக் கூறுவதும் பொய்மொழியோ? |
666 | | சாவியிட்டுப் பூட்டுமிட்டுச் சந்நிதியில் காவலிட்டுத் தேவிருக்கும் கோயிலைநீர் சிறைச்சாலை ஆக்கலாமோ? |
667 | | கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பினைநீர் பொல்லாதார் பொருளெனவே பூட்டிவைப்ப தழகாமோ? |
668 | | நல்லார்க்கும் பொல்லார்க்கும் நலமளிக்கும் நலத்தினைநீர் கல்லாலே கோட்டைகட்டிக் கடுங்காவல் செய்யலாமோ? |
669 | | காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணுதலை வீணாக மூடிவைத்து விளங்காமற் செய்யலாமோ? |
670 | | சாத்திரங்கள் கண்டறியோம்; சரித்திரங்கள் படித்தறியோம்; சூத்திரங்கள் செய்யாமல், துணைசெய்ய வேண்டும், ஐயா! | |
|
|