Untitled Document
695 | | தாகித்து வந்தவ ருக்குச்-செம்பில் தண்ணீர் அளித்திடச் சம்மதி யாது; சோகித்து வீழ்வோரைக் கண்டால்-தலை தூக்கி வியர்வை துடைக்க ஒட்டாது. |
696 | | கண்ணுதல் ஆலயம் சென்றால்-அங்கே கையிற் பிரசாதம் போட வொட்டாது; எண்ணி வரையளந் திட்டே-அதற்கு இப்புறம் அப்புறம் நில்லென்றதட்டும். |
697 | | கப்பலில் ஏறிட அஞ்சும்-சில காப்பிக் கடைஎட்டிப் பார்க்கவும் நாணும்; செப்பும் புகைவண்டி யுள்ளே-அது சீற்றம் அடங்கி ஒடுங்கி கிடக்கும். |
698 | | கண்ணான காந்தி மகானும்-இதைக் கண்டு நடுங்கிக் கடவுளை வேண்டி, உண்ணா திருந்தனர் என்றால்-இதன் ஊக்கம் சிறிதும் உரைத்திடப் போமோ! |
699 | | முன்னம் பெரியோர் இதனை-வெட்டி மூடிப் புதைத்தும், உயிர்வலி கொண்டு பின்னும் முளைத்ததே, ஐயா!-இது பேய்களும் அஞ்சும் பெரிய பேய், ஐயா! |
700 | | பொல்லாத பேயிதை நம்பி-இன்னும் பொங்கலிட் டாடுதல் புத்தியோ? ஐயா நல்லாக வேண்டுமே யானால்-இதை நாட்டைவிட் டோட்டித் துரத்துவோம், ஐயா! |
701 | | இப்பெரும் பேய்இனி மேலும்-நமது இந்திய நாட்டில் இருந்திட லாமோ? கப்பலில் ஏற்றுவோம், ஐயா!-நடுக் காயல் கடல்கண்டு தள்ளுவோம், ஐயா! |
| | 90. மதுவிலக்குப் பாடல்கள் | 702 | | வள்ளலெங்கள் காந்திமகான் வாக்குப் பலித்ததடா! துள்ளுமுன் பேயாட்டம் தொலைந்ததடா!-கள்ளரக்கா! வஞ்சிவள நாட்டிலுன் வாழ்வற்றுப் போச்சுதடா! நெஞ்சிலுணர்ந் தோடடா! நீ. | |
|
|