Untitled Document 752 | | மங்கைய ராகப் பிறந்ததனால் - மனம் வாடித் தளர்ந்து வருந்துவதேன்? தங்கு புவியில் வளர்ந்திடும் கற்பகத் தாருவாய் நிற்பதும் நீர் அலவோ? |
753 | | செம்மையிற் பெற்ற குணங்களெலாம் - நீங்கள் செய்வினை யாலே திருத்துவீரேல், இம்மைக் கடன்கள் முடித்திடவே - முத்தி எய்திச் சுகமா யிருப்பீரே. |
| | 97. உடல் நலம் பேணல் | 754 | | உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்; இடமும் பொருளும் நோயாளிக்கு இனிய வாழ்வு தந்திடுமோ? |
755 | | சுத்தமுள்ள இடமெங்கும் சுகமும் உண்டு? நீ அதனை நித்தம் நித்தம் பேணுவையேல், நீண்ட ஆயுள் பெறுவாயே. |
756 | | காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப்போவானே! |
757 | | ஆளும் அரசன் ஆனாலும் ஆகும் வேலை செய்வானேல், நாளளும் நாளும் பண்டிதர்கை நாடி பார்க்க வேண்டாமே. |
758 | | கூழையேநீ குடித்தாலும், குளித்த பிறகு குடி, அப்பா! ஏழை யேநீ ஆனாலும் இரவில் நன்றாய் உறங்கப்பா! |
759 | | மட்டுக் குணவை உண்ணாமல் வாரி வாரித் தின்பாயேல், திட்டு முட்டுப்பட்டிடுவாய்; தினமும் பாயில் விழுந்திடுவாய். | |
|
|