முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 117 |
Untitled Document
744 | | உள்ளந் தளர்வுறும் நேரத்திலே - உயிர் ஊட்டும் உரைகள் உரைப்பவர் ஆர்? அள்ளியெடுத்து மடியிருத்தி - மக்கள் அன்பைப் பெருக்கி வளர்பவர் ஆர்? |
745 | | நீதி நெறிநில்லா வம்பருமே - நல்ல நேர்வழி வந்திடச் செய்பவர் ஆர்? ஓதிய மானம் இழந்தவரை - உயர் உத்தமர் ஆக்க முயல்பவர் ஆர்? |
746 | | ஆவி பிரியும்அவ் வேளையில் - பக்கத்து அன்போ டகலா திருப்பவர் ஆர்? பாவி யமனும் வருந்திடாமல் - ஈசன் பாதம் நினைந்திடச் செய்பவர் ஆர்? |
747 | | ஏங்கிப் புருஷனைத் தேடியழும் - அந்த ஏழைக் கிதஞ்சொல்லி வாழ்பவர் ஆர்? தாங்கிய தந்தை யிழந்தவரைத் - தினம் சந்தோஷ மூட்டி வளரப்பவர் ஆர்? |
748 | | சின்னஞ் சிறிய வயதினிலே - ஈசன் சேவடிக் கன்பெழச் செய்பவர் ஆர்? உன்னம் இளமைப் பருவமெலாம் - களிப்பு உள்ளம் பெருகிடச் செய்பவர் ஆர்? |
749 | | மண்ணக வாழ்வினை விட்டெழுந்து - மனம் மாசிலா மாணிக்க மாயொளிர்ந்து விண்ணக வாழ்வை விரும்பிடவே - நிதம் வேண்டிய போதனை செய்பவர் ஆர்? |
750 | | அன்பினுக் காகவே வாழ்பவர் ஆர்? - அன்பின் ஆவியும் போக்கத் துணிபவர் ஆர்? இன்ப உரைகள் தருபவர் ஆர்? - வீட்டை இன்னகை யாலொளி செய்பவர் ஆர்? |
751 | | இப்பெரு நற்கரு மக்களெல்லாம் - உமக்கு ஈசன் அளித்த உரிமைகளாம் மெய்ப்பணி வேறும் உலகில் உண்டோ? - இன்னும் வேண்டிப் பெரும்வரம் ஒன்றுளதோ? | |
|
|