முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 121 |
Untitled Document | | 100. ஒற்றுமையே உயர்நிலை | 774 | | ஒற்றுமையாக உழைத்திடுவோம் - நாட்டில் உற்ற துணைவராய் வாழ்ந்திடுவோம்; வெற்றுரை பேசித் திரிய வேண்டாம் - இன்னும் வீணாய்ப் புராணம் விரிக்க வேண்டாம். |
775 | | கூடி விருந்துண்ண வேண்டவில்லை - பெண்ணைக் கொண்டு கொடுக்கவும் வேண்டவில்லை; நாடி எவரொடும் நட்பினராய்த் - தேச நன்மைக் குழைப்பதில் நஷ்டம் உண்டோ? |
776 | | கீரியும் பாம்புமாய்ச் சண்டையிட்டு - சாதி கீழென்றும் மேலென்றும் நாட்டிவிட்டு, பாரதத் தாய்பெற்ற மக்கள் என்று - நிதம் பல்லவி பாடிப் பயன் எதுவோ? |
777 | | வேதன் முகத்தில் உதித்தவேரே - இங்கு மேலா யெழுந்த குலத்தினராம்! பாத மதில்வந்த பாவியரே - என்றும் பாரில் இழிந்த அடிமைகளாம்! |
778 | | வாயில் விஷம்உண்டு பாம்பினுக்கு - கொட்டும் வாலில் விஷம் உண்டு தேளினுக்கு; தாயிற் சிறந்த பிரமனக்கும் - இரு தாளில் விஷம் உண்டோ? சாற்றுவீரே! |
779 | | உச்சி மரத்திற் சுவைக்கனியும் - தூரில் ஓடிப் பரந்தெழும் வேரதனில் நச்சுக் கனியும் பழுத்த பலாமரம் நானிலத் தெங்குமே கண்டதுண்டோ? |
780 | | சாதி இரண்டலால் வேறுளதோ? - ஒளவைத் தாயின் உரையும் மறந்தீரோ! ஆதி இறைவன் வகுத்ததுவோ? - மக்கள் ஆக்கி யகற்பனை தான் இதுவோ? | | | | 781 | | நாயனார் வந்த திருக்குலத்தை - உயர் நந்தனார் வந்த பெருங் குலத்தைத் | |
|
|