பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு121

Untitled Document
100. ஒற்றுமையே உயர்நிலை
774 ஒற்றுமையாக உழைத்திடுவோம் - நாட்டில்
     உற்ற துணைவராய் வாழ்ந்திடுவோம்;
வெற்றுரை பேசித் திரிய வேண்டாம் - இன்னும்
     வீணாய்ப் புராணம் விரிக்க வேண்டாம்.

775 கூடி விருந்துண்ண வேண்டவில்லை - பெண்ணைக்
     கொண்டு கொடுக்கவும் வேண்டவில்லை;
நாடி எவரொடும் நட்பினராய்த் - தேச
     நன்மைக் குழைப்பதில் நஷ்டம் உண்டோ?

776 கீரியும் பாம்புமாய்ச் சண்டையிட்டு - சாதி
     கீழென்றும் மேலென்றும் நாட்டிவிட்டு,
பாரதத் தாய்பெற்ற மக்கள் என்று - நிதம்
     பல்லவி பாடிப் பயன் எதுவோ?

777 வேதன் முகத்தில் உதித்தவேரே - இங்கு
     மேலா யெழுந்த குலத்தினராம்!
பாத மதில்வந்த பாவியரே - என்றும்
     பாரில் இழிந்த அடிமைகளாம்!

778 வாயில் விஷம்உண்டு பாம்பினுக்கு - கொட்டும்
     வாலில் விஷம் உண்டு தேளினுக்கு;
தாயிற் சிறந்த பிரமனக்கும் - இரு
     தாளில் விஷம் உண்டோ? சாற்றுவீரே!

779 உச்சி மரத்திற் சுவைக்கனியும் - தூரில்
     ஓடிப் பரந்தெழும் வேரதனில்
நச்சுக் கனியும் பழுத்த பலாமரம்
     நானிலத் தெங்குமே கண்டதுண்டோ?

780 சாதி இரண்டலால் வேறுளதோ? - ஒளவைத்
     தாயின் உரையும் மறந்தீரோ!
ஆதி இறைவன் வகுத்ததுவோ? - மக்கள்
     ஆக்கி யகற்பனை தான் இதுவோ?
781 நாயனார் வந்த திருக்குலத்தை - உயர்
     நந்தனார் வந்த பெருங் குலத்தைத்