பக்கம் எண் :

122கவிமணியின் கவிதைகள்

Untitled Document
  தீய குலம்எனத் தள்ளுவரேல் - அது
     தெய்வம் பொறுக்கும் செயலமோ?

782 வேதியராலே மழைவருமேல் - வயல்
     வேலை செய்யாது விளைந்திடுமோ?
வாதமெலாம்கட்டி வைத்திடுவோம் - ஒத்து
     வாழ்வதை மேற்கொண்டு டுழைத்திடுவோம்.

783 வீட்டுக்குள் சண்டைகள் போடுவதேன்? - கூரை
     வெந்து விழுவதும் கண்டிலிரோ?
நாட்டுக்கு நன்மையை நாடுபவர் - இந்த
     நாடகம் ஆடல் நகைப்பலவோ?

784 மானமே வாழ்வின் உயிர்நிலையாம - அதை
     மாசுறச் செய்தல் கொடுங்கொலையாம்;
ஈச சாதியெனும் பேச்சினைப்போல் - நெஞ்சை
     ஈர்ந்திடும் வாளொன்று வேறுளதோ?

785 மன்னுயிர்க் காக முயல்பவேர - இந்த
     மானிலத் தோங்கும் குலத்தினராம்;
தன்னுயிர் போற்றித் திரிபவரே - என்றும்
     தாழ்ந்த குலத்தில் பிறந்தோர், அம்மா!

101. பிச்சைக்காரர் கும்மாளம்
786 ஆல மரத்தின் நிழலிதுவே - நல்ல
     ஆயிரங் காலெழு மண்டபமாம்;
சாலவே தங்கும் பறவையெலாம் - அதிற்
     சங்கீதம் பாடிடும் பாடகராம்.

787 ஊர்களி லுள்ள உழவர்களே - நமக்கு
     ஓயா துழைத்திடும் ஊழியராம்;
சாரும்இவ் வீடுகள் யாவையுமே - உண்ணச்
     சாதம் சமைத்திடுஞ் சாலைகளாம்.

788 பாரிற் பரந்த பொடிமணலுக்கு - எந்தப்
     பஞ்சணை மெத்தை ஈடாகும், அடா!
காரும் பசானும் கரிந்திடினும் - ஒரு
     காரிய மில்லை, அறிவாய், அடா!