முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 123 |
Untitled Document 789 | | பட்டப் பகலை இரவென் றழைத்திடும் பாழான சாத்திரம் ஏதுக்கடா! கட்டிப் பளுகுங் கதைகளைக் - கேட்டிந்தக் காதுபுண் ணானதும் கொஞ்சமோடா! |
790 | | கொக்கோ! குருவியோ! காக்கையோடா! - நாமும் கோழியோ! ஆந்தையோ! கூகையோடா! மக்கள் இனத்திற் சேராதவரோ? - உண்ண வாயும் வயிறும் இல்லாதவரோ? |
791 | | சண்டிக் குதிரைமேல் நொண்டித் துரை - செய்யும் சவ்வாரி போலும்இவ் வாழ்வதனில், உண்ட துடுத்ததை யன்றிநாம் - வேறெதும் உண்மையாய்க் கண்டதும் உண்டோ? அடா |
792 | | கோட்டிலே ஜட்ஜி இருப்பதும் - வக்கீல் கொட்டி முழக்கிநின் றாடுவதும், கூட்டிலே கள்ளன் நடுங்குவதும் - இந்தக் கும்பி செயுஞ்செயல் அல்லவோடா? |
793 | | உண்டு வயிறு நிறைந்துவிட்டால் - உடன் உள்ளக் கவலை ஒழிந்ததடா! மண்டை யுடைத்து வழக்குகள் - பேசி நாம் வாணாளை வீணாளாய்ப் போக்கோம், அடா! |
794 | | மஞ்சள் சிவப்புத் துணியணிவோம் - பஞ்ச வர்ணக் கிளைகளைப் போல் நடப்போம்; வஞ்சனை சூதுகள் செய்யமாட்டோம் - கோர்ட்டு வாசலை எட்டி மிதிக்கமாட்டோம். |
795 | | ஆதி சிவனுமோர் ஆண்டி, அடா! - அவர்க்கு அன்பான பிள்ளைகள் நாமே, அடா! ஓதுமெய்ஞ் ஞானியர் யாவருமே - நமக்கு உற்ற உறவினர் ஆவார். அடா! |
796 | | லட்சமும் கோடியும் வேண்டாம், அடா! - அதை ரட்சிக்க நம்மாலே ஆகுமோடா! அட்சய பாத்திரம் உண்டே, அடா! - நமக்கு ஆரே நிகர்இவ் வுலகில்? அடா! | |
|
|