Untitled Document | | 102. செல்வமும் சிறுமையும் | | | செல்வச் சிறுமியர் களிப்பு | 797 | | பாகமாகச் செய்த பண்டம் உண்போம் - நன்றாய்ப் பக்குவம் வந்த பழங்கள் உண்போம்; தாகமா னால்பல பானகமும் - தாயார் தந்திட உண்டு மகிழ்ந்திடுவோம். |
798 | | காலத்துக் கேற்ற உடையணிவோம் - வாசம் கட்டிய சந்தனம் பூசிடுவோம்; கோலமாய் சீவிச் சிணுக்கெடுத்து - மலர் கூந்தலிற் சூட்டி அழகுசெய்வோம். |
799 | | பந்துகள் ஆடிப் பழகிடுவோம் - கழல் பாங்கியர் தம்மொடும் ஆடிடுவோம். சந்தம் எழக்கும்மி பாடிடுவோம் - சுற்றிச் சப்பாணி கொட்டிச் சிரித்திடுவோம். |
800 | | ஓடி ஒளித்துக் களித்திடுவோம் - நாங்கள் ஒற்றை இரட்டையும் வைத்திடுவோம்; நாடியே வட்டுகள் ஆடிடுவோம் - தோழி நாணக்கண் பொத்தி நகைத்திடுவோம். |
801 | | உன்னி யெழும்ஊஞ்சல் ஆடிடுவோம் - கேட்போர் உள்ளம் குளிரவே பாடிடுவோம்; சின்னஞ் சிறுவீடு கட்டிடுவோம் - அதில் சித்திர வேலைகள் செய்திடுவோம். |
802 | | பத்துப் பசுக்கள்எம் வீட்டில் உண்டு - நல்ல பாலுக்கு யாதொரு பஞ்சமில்லை; நித்தம் சுகமாக வாழ்ந்திடுவோம் - இந்த நீணிலத் மெமையொப் பாரும் உண்டோ? |
| | ஏழைச்சிறுமியர் மனப்புழுக்கம் | 803 | | நல்லபண் டங்களைக் கண்டறியோம்; - ஒரு நாளும் வயிறார உண்டறியோம், அல்லும் பகலும் அலைந்திடுவோம் - பசி ஆற வழியின்றி வாடிடுவோம். | |
|
|