பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு125

Untitled Document
804 அன்னப்பால் காணாத ஏழைகட்கு - நல்ல
     ஆவின்பால் எங்கே கிடைக்கும், அம்மா!
என்னப்பா! யாம்படும் பாட்டையெல்லாம் - சென்று
     யாரிடம் சொல்லி அழுவோம், அம்மா!

805 இட்டெலி ஐந்தாறு தின்றோம் என்பீர் - நீங்கள்
     ஏதும் கருணை யிலீரோ? - நீங்கள்
பட்டினி யாக இறந்திடுனும் - நாங்கள்
     பாவம் பழிசெய்ய மாட்டோம், அம்மா!

806 தேயிலை தேயிலை என்பீர், அம்மா! - இது
     தேக்கிலை தானோ தெரியாதம்மா!
வாயும் வயிறும் நிறைந்திடுமோ? - இதில்
     வைத்த அமுதம் திகைந்திடுமோ?

807 காப்பி காப்பியென்று கத்துவீரே - அதைக்
     கண்ணாலே கண்டதும் இல்லை, அம்மா!
சாப்பிடற் கேற்ற உணவிதுவோ? - அன்றிச்
     சட்டையோ! தொப்பியோ! கூறும், அம்மா!

808 ஆனைக்கொம்பன் சாதம்உண்டோம் என்பீர் - இதை
     ஆரே உலகினில் நம்பிடுவார்?
தேனைப் பழித்த மொழியுடையீர் - எம்மைத்
     தேராத பித்தர்என் றெண்ணினீரோ?

809 சோப்புச் சோப்பென்று புகழ்ந்திடுவீர் - அது
     சுட்டுக் கடிக்குங் கிழங்கதுவோ?
காப்புக் கைவீசி நடப்பவரே - அதன்
     காரியம் சற்றே உரைப்பீரே!

810 ஆனி ஆடிமாதக் கொந்தலிலே - மந்தை
     ஆடுகள் போலக் கொடுகிநிற்போம்;
வேனிலில் வெந்துடல் வேர்த்திடவே - வெயில்
     வேளை அலைந்து திரிந்திடுவோம்.

811 சுற்றிய கந்தை ஒருமுழமாம் - அதில்
     தோன்றிய பீறலும் ஆயிரமாம்;
பற்றும் அழுக்கினைப் போக்க வென்றால் - உடை
     பஞ்சு பஞ்சாகப் பறக்கும், அம்மா!