Untitled Document
812 | | ஈரோடு பேனுக்கு இடமாச்சு - கூந்தல் ஈந்தஞ் செடியது போலாச்சு; வாரி முடிப்பதும் இல்லை, அம்மா - எண்ணெய் மாதமும் மூன்றாக அறியாதம்மா! |
813 | | புண்ணும் சிரங்கும் நிறைந்ததம்மா! - அதில் போட மருந்தும் கிடையாதம்மா! கண்ணில் உறக்கமும் இல்லை, அம்மா! - எங்கள் கஷ்டம் அறிபவர் உண்டோ? அம்மா! |
| | 103. தொழிலாளிகளின் முறையீடு | 814 | | பாடு படுவர்க்கே - இந்தப் பாரிடம் சொந்தமையா! காடு திருத்தி நல்ல - நாடு காண்ப தவராலவோ? |
815 | | மந்திர மோதுவதால் - எங்கும் வயல்வி ளைவதுண்டோ? தந்திரப் பேச்சாலே - அரிசி சாதமாயிடுமோ? |
816 | | கட்டும் ஆடையாகப் - பருத்தி காய்த் தளிப்ப துண்டோ? சட்டி பானையெலாம் - மண்ணில் தாமே எழுவதுண்டோ? |
817 | | உழுது பயிர்செய்வோன் - வயிற்றுக் குணவு பற்றாமல், அழுத முதுநிதம் - நிற்ப தறியீ ரோ! ஐயா! |
818 | | ஆடை நெய்திடுவோன் - போர்க்கும் ஆடை யில்லாமல் வாடை கொண்டுநிதம் - கிடந்து வருந்த லாமோ? ஐயா! |
819 | | வீடு கட்டுமொரு - கொத்தன் விடுதி யில்லாமல், ஆடு மாடுகள்போல் - உலகில் அலைய லாமோ? ஐயா! | |
|
|