முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 127 |
Untitled Document
820 | | கோடி கோடியாக - நீங்கள் குவித்திடும் லாபம் வாடும் எம்மக்கள் - உண்ணா வயிற்றுச் சோறலவோ? |
821 | | மனம் திரியாமல் - காலை மாலை யெப்பொழுதும் குனிந்து வேலைசெய்வோர் - கும்பி கொதிக்க லாமோ? ஐயா! |
822 | | கும்பி கொதித்திடவே - உடல் கூனிக் குறுகி நின்று நம்பும் எங்களையே - நீவிர் நலிய வைக்கலாமோ. |
823 | | வாழ வேண்டுமெனில் - தொழில்கள் வளர வேண்டுமையா! ஏழை என்றொருவன் - உலகில் இருக்க லாகாதையா! |
| | 104. வேலையில்லாத் திண்டாட்டம் | 824 | | சாத்தி ரங்கள் சரிதங்கள் மன்னவர் கோத்தி ரங்கள் குலங்கள் இலக்கண சூத்தி ரங்கள் தொகுத்து விரித்துநான் ஆத்தி ரத்தொடு கற்ற தளவுண்டோ? |
825 | | மண்ணில் உள்ளவும் வானகத் துள்ளவும் எண்ணி எண்ணி எழுதிய நூலும் நுண்ணிய தாக நுழைந்து தெரிந்தவை கண்ணி யம்பெறு காலம்எக் காலமோ? |
826 | | பட்டம் பெற்றனன்; பண்டிதர் தம்மிடம் மட்டி லாத மதிப்புரை வாங்கினன்; துட்டி லாது சுழன்று கறங்கும்இக் கட்டம் நீங்கு வழிஇனும் கண்டிலேன். |
827 | | வீடு விற்றும், விளைநிலம் விற்றும், மாடு ஆடு விற்றும், அணிமணி தாம்விற்றும், பாடு பட்டுப் படித்த படிப்பெலாம் வாடும் என்பசி யாற்றிய தில்லையே. | |
|
|