முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 133 |
Untitled Document 866 | | சர்ச்சிலிடும் கர்ச்சனையில் தளர்ந்து மனம் சடைவாரோ. மெச்சிடவே இந்தியரும் வீரமொழி பகர்வாரோ? |
867 | | உபசார விருந்துகளால் ஊக்கமெலாம் உடைந்திடுமோ? அபசாரம் இந்தியர்கள் அணுகாமல் காப்பாரோ? |
868 | | 'புஞ்சிரிப்பில், கைகுலுக்கில், புத்திமிக மயங்கிடுமோ? நெஞ்சிருப்பை நம்மவரும் நிறைவேற்றி வருவாரோ? |
869 | | இரைந்தழுது பட்டதெல்லாம் இந்தியர்தம் உள்ளத்தில் கரைந்திடுமோ? இந்நாளில் கனலாகி மூண்டெழுமோ? |
870 | | மாதரசி சரோசினியார் வாக்குநயம் பலித்திடுமோ? மூதறிஞர் மாளவியா முயன்றதவம் முற்றிடுமோ? |
871 | | சீக்கிரமாய் காந்திமகான் செயக்கொடியும் கட்டுவரோ? ஊக்கமுடன் இந்தியரும் உளம்மகிழ்ந்து வாழ்வாரோ? (குறத்திப்) |
| | 108. வீரத்தாய் | 872 | | தாயிற் சிறந்த தப்பா! - பிறந்த தாய்நா டதுபேணார் நாயிற் கடைய ரென - இந்த நானிலம் சொல்லும், அப்பா! |
873 | | தாய்நிலம் காத்திடவே - ருஷியர் சாவும் மதித்திடாமல் காய்சினப் போரதிலே - சென்று கலப்பது கண்டிலையோ? | |
|
|