பக்கம் எண் :

134கவிமணியின் கவிதைகள்

Untitled Document
874 நன்றுபுரி வதற்கே - உடலை
     நாமிங் கெடுத்தோம், அப்பா!
நின்று தெரிந்திடுவாய் - அதுதான்
     நீர்மேற் குமிழி, அப்பா!

875 பாரத நாடளித்த - உன்றன்
     பரம்பரை முன்னோரின்
வீரச் செயலை எல்லாம் - நீயும்
     மேற்கொள்ள வேண்டும், அப்பா!

876 புகழ்வி ளையுமிடம் - அந்தப்
     போர்முனையே, அப்பா!
மகனே உன்தாயின் - உள்ளம்
     மகிழச் செய்வாய், அப்பா!

877 சற்றும் தளராமல் - இன்று
     சண்டைக்குப் போய்வருவாய்;
வெற்றி கிடைக்கும், அப்பா! - ஈசனை
     வேண்டித் தொழுதேன், அப்பா.

109. தேசியக் கொடியின் சிறப்பு
878 தேசக் கொடியின் சிறப்பைச் சிறிதேஇங்கு
     ஆசைப் பெருக்கால் அறைகின்றேன் - மாசிலா
வீரரைப் பெற்று விரிந்த புகழ்பெற்ற
     பாரதத் தாயைப் பணிந்து

  வேறு
879 பாரில் உயர்ந்தமலை இமயமலை - அன்னை
     பாரத தேவி பாராட்டு மலை;
சீரில் உயர்ந்திடும் தேசக்கொடி - அதன்
     சிகரம் அணிந்தின்று பறக்குதுபார்.

880 வீரர் துணிந்தேறி நட்டகொடி - இது
     வெற்றி விருதா யெடுத்தகொடி;
யாரும் இறைஞ்சி வணங்கும்கொடி - நமக்கு
     என்றும் சுதந்திரம் ஈட்டும் கொடி.