முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 135 |
Untitled Document 881 | | கங்கையினும் புனித மானகொடி - கோடிக் கதரின் இனியமணம் கமழும்கொடி, மங்கையர் நோன்பிருந்து நெய்தகொடி - அவர் வாழ்வு தழையவந்த மங்கலக் கொடி. |
882 | | மின்னல் இடிக்கும் அஞ்சாதுயருங்கொடி - விண்ணில் வீரர் திலகர்தொழும் விருதுக்கொடி; தன்னை மிதித்தெறிந்த சூரர்களெல்லாம் - இன்று தாழ்ந்து தலைவணங்கக் காணும்கொடி. |
883 | | சத்தியம் தவறாது காக்கும்கொடி - சாதிச் சமயச் சழக்குகளைப் போக்கும் கொடி, உத்தம வீரர்களும் பத்தினிகளும் - தத்தம் உயிருக் குயிராகப் போற்றும்கொடி. |
884 | | கலியுகக் கண்ணன் கருணாகரன் - அந்தக் காந்தி மகான்வாழ்த்தி யெடுத்தகொடி; புலியொடு பசுவுஞ்சென் றோர்துறையில் - மனம் பொருந்திநீர் அருந்திடச் செய்யும்கொடி. |
885 | | காணாப் புதுமைகளைக் காட்டும்கொடி - தொண்டர் கனவையும் நனகவாக மாற்றும் கொடி; வாணாளின் இன்பமெலாம் வழங்கும்கொடி - நாட்டின் வளத்தை வளர்க்கவந்த மந்திரக்கொடி. |
886 | | பட்ட மரம்தழையப் பண்ணும்கொடி - பொல்லாப் பகைவரை நண்பராய்க் கூட்டும்கொடி; துட்டர் துடுக்குகளை அடக்கும்கொடி - தீய சோம்பலை ஓட்டித் துரத்தும்கொடி. |
887 | | கிழவரைக் குமரராய்த் தேற்றும்கொடி - எந்தக் கேட்டிலும் நன்மையே நாடும்கொடி; அழுதவாய் சிரித்திடப் பார்க்கும்கொடி - ஏழை அடிமையை ஆண்டானா யாக்கும்கொடி. |
888 | | செய்யாத் தவங்கள் சிறைச் சாலையிற் செய்தோர்க்கின்று சிறந்த வரமளிக்கும் தெய்வீகக்கொடி; ஐயோஎன் றடிபட்டு விழுந்தவர் தம் - நோய் அகற்றுஞ் சீவினியாய் அமைந்தகொடி. | |
|
|