பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு141

Untitled Document
  வீமன் வீர பாண்டியனின்
     வெற்றி முரசு முழக்கியிந்தப்
பூமி மீதெந் நாளுமவன்
     புகழைப் பாடிப் போற்றுவமே.

920 காய்ந்து போரில் வெள்ளையரைக்
     கறங்கச் செய்த ஆண்சிங்கம்;
ஆய்ந்து வினைகள் செய்துநிதம்
     அறங்கள் காத்த அறிவுடையோன்;
பாய்ந்து நாயை முயல்விரட்டும்
     பாஞ்சை ஆண்ட பாண்டியனுக்கு
ஏய்ந்த புகழை இனியதமிழ்
     இசையிற் பாடிப் போற்றுவமே.

921 மான முற்றும் விலைகொடுத்து
     மண்ணை வாங்கி அரசாளும்
ஈன வாழ்வை உள்ளத்தில்
     எள்ளத் தனையும் எண்ணாதோன்;
ஊன உடலை வெறுத்துதறி
     உலகி லழியாய்ப் புகழ்நாட்டி
வானம் சென்ற வீரனைநாம்
     மறவா தென்றும் போற்றுவமே.

922 கட்ட மொம்மன் சீமையிலே
     காகம் பறவா தெனுமாறு
சட்ட திட்டம் செய்துகுடி
     தாங்கி நின்ற ஜகவீரன்;
துட்டர் அஞ்சும் துரைராஜன்
     துணிந்த வீரன் என்றுலகில்
எட்டுத் திசையும் புகழ் பெற்றோன்
     எங்கள் வீர பாண்டியனே.

923 கட்டமொம்மன் சீமையிலே
     காகம் பறவா தெனுமாறு
சட்ட திட்டம் செய்துகுடி
     தாங்கி நின்ற ஜகவீரன்;