பக்கம் எண் :

140கவிமணியின் கவிதைகள்

Untitled Document
  வந்த பொல்லா வெள்ளையரை
     மதியா வீர பாண்டியனைச்
சிந்தை மறவா தோவியத்தில்
     சிலையில் கண்டு போற்றுவமே.

916 தஞ்சம் என்று வந்தவரைத்
     தாங்கும் இனிய குணசீலன்;
பஞ்சம் அறியாப் பழம்பதியாம்
     பாஞ்சைப் பதியில் அரசாண்ட
விஞ்சு புகழ்சேர் வீராதி
     வீரன் கட்ட பொம்மன்பேர்
நெஞ்சில் எழுதி வைத்தன்பால்
     நித்தம் நித்தம் போற்றுவமே.

917 'தானம் வேண்டில் தருகின்றேன்;
     தருமம் வேண்டில் தருகின்றேன்;
வானம் இடிந்து விழுந்திடினும்
     வரிதந் தும்மை வணங்கேன்' என்று
ஏனை வெள்ளைக் கம்பெனியர்க்கு
     எடுத்துக் கூறித் தென்னாட்டின்
மானம் காத்த பாண்டியனை
     மறவா தென்றும் போற்றுவமே.

918 'தானம் வேண்டில் தருகின்றேன்;
     தருமம் வேண்டில் தருகின்றேன்;
வானம் மழையைப் பொழியுதையா!
     மண்ணில் பயிரும் வளருதையா!
யான்இங் குமக்கு வரியிறுப்ப
     தேனோ?' என்று வெள்ளையர்முன்
மானம் காத்த பாண்டியனை
     மறவா தென்றும் போற்றுவமே.

919 சீமை வெள்ளைக் காரர்படை
     சிதறி ஓட முறியடித்தோன்
ஊமைத் துரையென் றுலகுபுகழ்
     ஒப்பில் விஜயன் முன்வந்த