பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு139

Untitled Document
வேறு
910 நெற்றி வியர்வை நிலத்தில் விழஉழைப்போம்;
பெற்ற சுதந்திரத்தைப் பேணுவோம் - சுற்றமெனப்
பன்னாட்டு மக்களையும் பாராட்டிப் பாரதமா
நன்னாட்டில் வாழுவோம் நாம்.

113. வ.உ.சிதம்பரம் பிள்ளை
911 கைநோவக் கால்நோவக் கல்லுடைத்து செக்கிழுத்து
மெய்சோர்ந்தும் ஊக்கம் விடாதுநின்ற - ஐயன்
சிதம்பரம் அன்றுசிறை சென்றிலனேல், இன்று
சுதந்திரம் காண்பாயோ? சொல்.

912 அஞ்சுவனோ வெள்ளையரின் ஆட்சியொழிப் பேன்என்று
வஞ்சினம் கூறிநின்ற மாவீரன் - விஞ்சுபுகழ்
செந்தமிழ்ச் செல்வன் சிதம்பரப்பே ரண்ணலை நாம்
வந்தனை செய்வோம் மகிழ்ந்து,

913 கப்பலை ஒட்டிக் கடுங்காவதற்கு ஆளாகி
உப்பிலாக் கூழ்உண் டுடல்மெலிந்தோன் - ஒப்பிலாத்
தென்னாட்டு வீர திலகன் சிதம்பரத்தின்
நன்னாமம் வாழ்த்துகவென் நா.

114. வீரபாண்டியக் கட்டபொம்மன்
914 மீசை முறுக்கிநின்று வெள்ளையரே உங்களுக்கோர்
காசும் தாரோமென்று கர்ஜித்த - கேசரியாம்
பாஞ்சைப் பதிவீர பாண்டியனை நெஞ்சமே
வாஞ்சையொடு பாடுவோம் வா.

வேறு
915 செந்தில் முருகன் சேவடியைத்
     தினமும் போற்றித் தொழுதிடுவோன்;
சந்தக் கவிகேட் டுளமகிழ்ந்து
     தரளம் வாரி அளித்திடுவோன்;