Untitled Document
933 | | எவ்வுளமுங் குளிரஒளிர் இளமதியே! வருக! எங்கும் நிறை புகழ்மணக்கும் எழில்மரலே! வருக! செவ்வியுறும் அரசர்குலந் திகழ்மணியே! வருக! ஜ்யார்ஜீமகா ராஜனருள் திருமகனே! வருக! |
934 | | பொருளேந்தி இனியதமிழ்ப் புதுமாலை ஏந்திப் புவிராசர் தொழுவர்; உனைக் கவிராசர் புகழ்வர்; அருளேந்தி எமையாளும் அரசர்குலக் கொழுந்தே! ஆதரித்தெம் திருநாட்டின் அணிகாண வருக! |
935 | | மந்தாரம் முல்லையிரு வாட்சிகுட மல்லி மணங்கொண்ட பூவுலக மாதரசி ரோஜா வந்தானோ வந்தானோ என்றுமுக மலர்ந்து வள்ளலுனை எதிர்கொண்டு வளங்காட்டும் ஐயா! |
936 | | கமுகோடு தெங்குபனை காணிக்கை கொண்டுன் கழல்போற்றக் கடற்கரையில் காத்துநிற்கும், அரசே! இமையாத கண்மலர்கொண் டெழுந்துபல தருக்கள் எக்கணமும் நின்வரவை எதிர்பார்க்கும், அரசே! |
937 | | ஐய, உன்றன் வரவையெண்ணி ஆவினங்கள் உழைத்தே ஆயிரக்கால் மண்டபங்கள் அமைத்துவைத்த பலவே; செய்யதிரு வடிவணங்கதத் தென்குமரி நங்கை சேர்த்து வைக்கும் முத்தினங்கள் செப்ப எளிதலவே. |
| | வேறு | 938 | | வானோங்கி வளர் இமய மலைகாண லாமே! வற்றாத கங்கைநதி வளங்காண லாமே! கானோங்கு மரச்சோலைக் கவின்காண லாமே! கமலமணித் தடம்நோக்கிக் கண்களிக்க லாமே! |
939 | | சிறையன்னம் உண்டு; பசுங்கிளி உண்டு; பிரமன் சித்திரக்கை நலம்விளக்கித் திரியுமயில் உண்டு. நிறைநீரில் நீந்துபல நிறமீன்கள் உண்டு; நீரில்இரை தேர்குருகு நிரைஉண்டு மிகவே. | |
|
|