முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 145 |
Untitled Document
940 | | ஊனுண்டு பாய்புலியும் கடுவாயும் உண்டு; உறுமியெதிர்ந் தோடிவரும் பன்றிகளும் உண்டு; மான் உண்டு; வன்கரடி மதயானை உண்டு; மாவேட்டை நீயாட வனம் உண்டு பலவே. |
941 | | படியேந்தி நிதியளக்கும் பட்டினங்கள் பலவாம்; பணிசிறந்த திருக்கோயில் பள்ளிகளும் பலவாம் கொடியேந்தி விண்ணளக்குங் கோபுரங்கள் பலவாம்; குவலயமெ லாம்புகழும் கோரிகளும் பலவாம்; |
942 | | சாதிகளும் பலவாகும்; சமயங்கள் பலவாம்; சாத்திரங்கள் பலவாகும்; தருமங்கள் பலவாம்; ஓதுமொழி பலவாகும்; உணவுடைகள் பலவாம்; உலகமிசை இதுபோலும் ஒருதேசம் உளதோ? |
943 | | இப்பெரிய எம்நாட்டின் நலம்யாவும் எளியேம் எடுத்தோதுந் திறமின்றி விடுத்தோம் இங்கு, ஒப்பரிய அரசகுலத் துதித்த இளங்கோவே! ஐய! உன் அடிக்கு வந்தனங்கள் உவந்தளித்தோம் பலவே. |
944 | | கம்பன் அன்றி எவரேஇக் கண்காட்சி யாவும் கவியாலே இனிமையுறக் காட்டவல்லர், ஐய! அன்புவியெ லாம்புகழும் அரசகுல விளக்கே! அறியர்இச் சிறுமொழியும் அன்புடன் எற்றருளே! |
945 | | வாழி! வேல்ஸிள மன்னவன் வாழியே! வாழி! நல்லறம் மாண்புடன் வாழியே! வாழி! பாரதத் தாய்நிதம் வாழியே! வாழி! செந்தமிழ் மாமொழி வாழியே! |
| | 118. திருமூல மன்னர் | 946 | | பாட்டில் அமைப்பர் படிய மனங்கொள்வர் ஏட்டில் அழகாய் எழுதிவைப்பர் - வாட்டந்தீர்த்து அன்பு கனியஎமை ஆளுந் திருமூல மன் புகழைக் கேட்டு மகிழ்ந்து. | |
|
|