Untitled Document
947 | | மன்னும் மதிபோல் வயங்குமே, வஞ்சியதைப் பொன்னுலக மாக்கிப் புகழ்பெறுமே - முன்னமொரு சீதைக் கணைகண்ட செம்மல் தலைகுனியக் கோதைக் கணைகண்ட கோ. |
948 | | எண்ணுந் திருவருளால் இம்மூல மன்னவற்கு நண்ணும் புகழெல்லாம் நம்புகழே - மண்ணின்று தாளுண்ட நீரைத் தழைபூவும் காயும்உணா நாள் உண்டோ? கோதாய்! நவில். |
949 | | மாவேறு மந்தி வருக்கைச் சுளையமுதம் நாவேற உண்ணுமலை நாடாள்வான் - பாவேறு செந்தமிழான் வெண்குடையான் செங்கோலான் இவ்வுலகில் சந்ததமும் வாழ்க தழைத்து |
950 | | பூமகளைக் காத்துப் புகழ்மகளைப் போற்றிநிதம் நாமகளை வஞ்சிநல் நாட்டிருத்தித் - தாமமணி வண்ணன் அடி என்றும் மனங்கொண்டு மாமூல அண்ணல் இனிதாள்க அரசு! |
951 | | வஞ்சித் திருமூல மன்னவற்குப் பன்னலமும் விஞ்சித் திருவளை வேண்டுதுமே - பொன்செய் குளம்பெருக்கி வாழும் குடிக்குப் பயிர்கள் வளம்பெருக்கும் என்று மதித்தது. |
952 | | கண்ணுக் கினியன் கவிக்கினியன் வாய்க்கினியன் பண்ணுக் கினியன் அருள் பற்றுமினோ - நண்ணு புகழ் வஞ்சி மகிழ்நன் வரும்திருநாட் கோலமிது நெஞ்சுக் கமுதளிக்கும் நேர். |
953 | | என்றம் தழைத்திடுக! இன்தமிழ்ப்பா வேய்ந்திடுக! நின்றிந் நிலத்தில் நிலவிடுக! - துன்றுசுவைப் பாவடிகள் தேன்வடியப் பாடும் புலமை இளங் கோவடிகள் போந்த குலம். | |
|
|