பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு147

Untitled Document
119. ரீஜென்ட் மகாராணி

954 பொன்னேஇப் புவியதனைப் புரக்கவந்து கொலுவிருக்கும்
     பொலிவு தானோ?
தன்னேரி லாஅழகு தனியரசு செலுத்தவரும்
     தகைமை தானோ?
அன்னேயென் றேஅலறும் அகிலமுறைகேட்க எழும்
     அன்பு தானோ?
என்னேயான் சொலத்துணிவேன் எமையாளும் மகாராணி
     இருந்த வாறே!

955 நீதியால் உலகாளும் நெறிமன்னர் நாண, உயர்
     நேர்மை கொண்டாள்;
தீதிலா தொருதுறையில் பசுவோடு புலியுண்ணச்
     செங்கோல் பூண்டாள்;
கோதிலாத் தருமங்கள் குணங்கண்டு பாலிக்கும்
     கொள்கை மிக்காள்;
சேதுபாய் மகாராணி அரசாள என்னதவம்
     செய்தோம்! அம்மா!

956 தஞ்சமென நின்றுதொழும் தம்குடிகள் குறையெல்லாம்
     தாமே கண்டு,
நெஞ்சமர யோசித்து நெல்வரியைப் பணமாக்கி
     நியாயம் செய்தாள்;
அஞ்சலென நொந்தவரை ஆதரவு செய்வதிலிவ்
     அன்னைக்கு ஈடு
வஞ்சிநிலத் தில்லையெனில் மற்றெந்த நிலம்காட்ட
     வல்லது? அம்மா!

957 வாய்பேச இயலாத பிராணிகளும் வஞ்சியிதில்
     வளர்ந்து வாழத்
தாய்போலும் தயையுடையாய்! உயிர்ப்பலிசெய் கொடுமைகளைத்
     தவிரச் செய்தாய்;
பாய்திரைசூழ் உலகாளும் மன்னரெல்லாம் பார்த்தறங்கள்
     படிக்கும் வண்ணம்
சேய்நிலத்தும் இந்நிலம்போல் நின்பெருமை எந்நாளும்
     சிறக்க மாதோ!