பக்கம் எண் :

148கவிமணியின் கவிதைகள்

Untitled Document
120 சித்திரை மன்னர்
958 ஆயிரத்தெண் பத்தெட்டில் ஐப்பசிமா தத்தில் நலம்
ஏயுமொரு தேதியிரு பத்தெட்டில் - மேயகுரு
வாரமதில் சித்திரையில் வந்தவிடை லக்கினத்ததில்
சேரஇளங் கோவுதித்த தே.

கண்ணிகள்
959 வஞ்சிதேசம் எங்கும்புது மணம் வீசும் பூவாம்,
மணம்வீசும் பூ அழகை வகுத்துரைக்க லாமோ!
பார்வதிபாய் மகாராணி பக்கம்வளர் கிளியாம்,
பக்கம்வளர் கிளிக்கினிய பழங்கள் கொண்டு போவோம்.
960 முடிவேந்தர் மடியிருந்த முத்தமிடும் முத்தாம்,
முத்தமிடும் முத்தின்விலை மூவுலகில் உண்டோ!
961 திருமூல மகிபருக்குத் தினம்இனிக்கும் அமுதாம்.
தினம்இனிக்கும் அமுதின்விலை செப்பவலார் உண்டோ!
962 வஞ்சிராஜ குலம்தழைத்து வந்தபசுங் கொழுந்தாம்,
வந்தபசுங் கொழுந்தோங்கி வளர்ந்தது நிழல் தருமே!
963 மூலமன்னர் செய்தருமம் முற்றிவந்த கனியாம்,
முற்றிவந்த கனிநமக்கு முழுதும் இன்பம் தருமே!
964 அன்புநீரை அடைத்துநாங்கள் அகம்வளர்க்கும் பயிராம்,
அகம் வளர்க்கும் பயிருமெங்கட் களிக்கும் நல்ல பலனே!
965 குடிகளுக்கு க்ஷேமமெல்லாம் கொண்டுவரும் கலமாம்,
கொண்டுவரும் கலத்திற்கிணை குவலயத்தி லண்டோ!
966 சித்திரைநாள் அவதரித்த சேரஇளங் கோவாம்,
சேரஇளங் கோவினுக்குச் செகதீசன் துணையே!

சித்திரை மன்னர் முடிசூட்டி விழா
967 சேரகுல சேகரனைச் சித்திரைநாள் வந்தமன்னைப்
பாரரசி பார்வதிபாய் பாலகனைச் - சீரமைந்த
வஞ்சிக்கு வாய்த்தமண வாளனை வாழ்த்துவதெம்
நெஞ்சுக்கு வாயத்த நினைவு.