Untitled Document
997 | | சிந்தை கவரும் சிகவாமி நற்சரிதம் செந்தமிழில் சுந்தரன் செய்தனனால் - முந்தவரு மூலத்தை வெல்லும் மொழிபெயர்ப்பென் றேஎவரும் சாலப் புகழ்ந்திடவே தான். |
998 | | ஆசிரியன் பேர்விளங்க ஹார்வி புரங்கண்ட மாசிலா மாணவர் மாணிக்கம் - பேசுபுகழ்ச் சுந்தரன் வந்துதித்த தொல்குலம் இந்நிலத்துச் சுந்ததம் வாழ்க, தழைத்து! |
999 | | ஆறுமுகம் பிள்ளை அவதானம் கண்டெளியேன் வேறுமுக மன்கூற வேண்டுமோ? - தேறுமதிச் சேஷையா மெச்சித் திருவாய் மலர்ந்து, 'ஸபாஷ்! பேஷையா!' என்ற பிறகு. |
1000 | | மன்றுபுகழ் அண்ணா மலைமன் வரலாற்றை இன்னமுதம் பாவால் இயம்பினான் - பன்னுதமிழ் ஐயமறக் கற்றஅவதானி ஆறுமுகன் வையமெல்லாம் போற்றி மகிழ்ந்து |
126. செய்குத்தம்பித் பாவலர் |
1001 | | கேட்டார் மகிழ்வடையக் கேளாதார் தேடிவரக் கோட்டாற்றுச் சாதிரன்பால் கூறினாள் - நாட்டாரின் சிந்தைகுடி கொண்டபுகழ் செய்குத்தம்பிப்பாவலர்மேல் பைந்தமிழில் எழுது பா |
1002 | | இனிய தமிழில் இசைத் தமிழில் யார்க்கும் ஆசை தருந்தமிழில் கனியும் அன்பும் பெருகஇரு காதும் குளிரக் கண்ணபிரான் புனித சரிதம் எமக்கோதும் புலவன் உடையான் பிள்ளைக்குத் தனமும் வாழ்வும் வாணாளும் தரணிமீது தழைக்குகவே | |
|
|