முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 153 |
Untitled Document
993 | | வையம் புகழும் திருவஞ்சி வளநா டதனை முடிசூடிச் செய்ய முறைசெய் தரசாண்ட சேர மன்னர் சரிதமெலாம் ஐயம் இன்றிச் சிலையிலெழுத்து அய்ந்து சொன்ன பேரறிஞன், துய்ய சீலன் சுந்தரன்பேர் சொல்லி நாளும் போற்றுவமே. |
994 | | ஆடும் தில்ல அம்பலன் அடிகள் மறவா அன்புடையோன், பாடித் திருவா சகத்தேனைப் பருகிப் பருகி இன்புறுவோன், கோடைப் பதிசுந் தரமுனியைக் குருவாய்க் கொண்ட குணசீலன், ஈடி லாத பேரறிஞன் எங்கள் பெரியன் சுந்தரனே. |
995 | | சித்திரம் வரைந்து காண்போம்; சிலைகண்டு தொழுது நிற்போம்; சத்திரம் கட்டி வைப்போம்; தருமங்கள் பலவும் செய்வோம்; வித்தகன் சுந்தரன்பேர் மெய்ம்மையாய் விளங்க வைத்தல், இத்தமிழ் நாட்டில் வாழும் எம்மனோர் கடமை யன்றோ? |
996 | | எம்மொழியும் ஈடாகா திம்மொழிக் கென்றுலகம் செம்மையுறக் கண்டு தெளிந்திடவே - நம்மினிய செந்தமிழின் தெய்வச் சிறப்பெல்லாம் யாருரைத்தார் சுந்தரனைப் போலத் தொகுத்து. | |
|
|