Untitled Document
989 | | தாலம் புகழும் திருஞான சம்பந் தப்பேர் முனிவாழ்ந்த கால மதனை ஆராய்ந்து கற்றோர் மெச்சக் கணித்திட்டோன், ஆலப் புழைமா நகருடைய அறிஞன் பெருமாள் அரும்புதல்வன், சீலஞ் சிறந்த சுந்தரனைச் சிந்தை மகிழ்ந்து போற்றுவமே, |
990 | | தில்லைப் பெருமான் அருள்பெற்றுச் செல்வன் நடரா ஜனைப்பெற்றேன், நெல்லை இந்து கலாசாலை நிறுவித் தலைமை தாங்கிநின்றோன், சொல்லி லமுதம் கனிந்துசுவை சொட்டச் சொட்டக் கவிதருவோன், நல்லன் பஹதூர் சுந்தரனை நாளும் நாளும் போற்றுவமே. |
991 | | ஊக்கம் குன்றி உரம்குன்றி ஓய்ந்த தமிழர்க் குணர்வூட்டி, ஆக்கம் பெருக, அறிவோங்க, ஆண்மை வளரச் செய்து, உலகில் மீக்கொள் புகழைப் பெற்றெழுந்த விறலோன் நமது சுந்தரனைப் பாக்கள் புனைந்து மகிழ்ந்துநிதம் பாடி இனிது போற்றுவமே. |
992 | | தேடி வைத்த செல்வமெலாம் திரைகொண் டோட வருந்திமுகம் வாடி மெலிந்த தமிழணங்கு மகிழ்ந்து மகிழ்ந்து கூத்தாட, நாடும்அரிய மனோன்மணிய நாட கத்தைச் செய்தளித்த நீடு புகழோன் சுந்தரனை நித்தம் நித்தம் போற்றுவமே. | |
|
|