முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 151 |
Untitled Document | | 121. வெ.ப. சுப்பிரமணிய முதலியார் | 983 | | எண்பதாண் டான இளைஞனே, இன்னமுதின் பண்பெலாங் காட்டுதமிழ்ப் பாவலனே - நண்பனே வெள்ளகால் செல்வனே, வேள்சுப் பிரமணிய வள்ளலே, வாழ்க மகிழ்ந்து! |
| | 122. கு. ஆறுமுகம் பிள்ளை | 984 | | பாரறிய நாவலர் பட்டமும் பொற்கிழியும் பேரறிஞன் ஆறுமுகன் பெற்றனனே - காரெழுந்து பெய்யும் மழைபோல் பெருஞ்சொல் மழை பொழிந்தது சைவம் தழையவைத்த தால். |
| | 123. டி.கே. சிதம்பரநாத முதலியார் | 985 | | கன்னித் தமிழேபோல், கம்பன் கவியேபோல், மன்னும் பொதிகை மலையேபோல் - பன்னுநம் நாடு மகிழச் சிதம்பர நாத நண்பா! நீடுநீ வாழ்க நிலைத்து. |
986 | | அன்னைதமிழ்ச் செல்விக்கு அருந்தொண்டு செய்தின்னும் மன்னுலகில் பல்லாண்டு வாழியவே - என் இனிய நண்பா! சிதம்பர நாதா! நம் மாமுருகன் கண்பார்த் தருளக் கனிந்து. |
987 | | குற்றால நாதா! குழல்வாய் உமைபங்கா! பொற்றாள் பணிந்துன்னைப் போற்றுகின்றேன் - கற்றார்தம் சிந்தை மகிழச் சிதம்பர நாதநண்பன் சந்ததம் வாழவரம் தா. |
| | 124. மனோன்மணியம் சுந்தரனார் | 988 | | ஆரா அமுதம் அனைய தமிழ்வளர்த்த பேரா சிரியர் பெருமானைச் - சீராரும் வஞ்சிமா மன்னர் மதித்தகுண சுந்தரனை, நெஞ்சமே! நித்தம் நினை. | |
|
|