பக்கம் எண் :

150கவிமணியின் கவிதைகள்

Untitled Document
976 நீதி வளர நிதிவளர நல்லறிவின்
சோதி வளர்ந்தெங்கும் தோன்றவே - ஓதுபுகழ்ச்
சித்திரைநாள் வந்த திருவாளன் ஏந்துமுடி
நித்தமும் வாழ்க நிலத்தது.

977 பார்வதிபாய் கண்குளிரப் பாவணர் சொற்குளிர
நேர்வதியும் வஞ்சி நிலங்குளிரத் - தார்மௌலி
சித்திரைமன் ஏந்தித் திருவனந்தை மாநகரில்
எத்தினமும் வாழ்க இனிதுது.

978 நாட்டுக் கணியாகி நன்மைக்கு வித்தாகிப்
பாட்டுக் கினிய பயனாகி - ஊட்டிநிதம்
குஞ்சணைக்கும் தாய்போல் குடியணைக்கும் சித்திரைமன்
வஞ்சிநிலம் வாழ்க மகிழ்ந்து.

சித்திரை மன்னர் பிறந்தநாள் விழா

979 பூவால் பசுங்கொடியும் புன்சிரிப்பால் கைம் மகவும்
நாவால் இளங்கிளியும் நன்கோதும் - மூவாத
சீமான் அனந்தைத் திருமால் அடிமறவாக்
கோமான்தன் ஆட்சிக் குணம்.

980 ஈசன் அடியார் எவருக்கும் ஆலயத்தின்
வாசல் வழிதிறந்த மாமன்னன் - நேசமிகு
புத்தர் அசோகர் புகழையெலாம் - தன்புகழா
நித்தமும் கொண்டான் நிலத்து.

981 வஞ்சி வளநாடு வானவர்நா டென்றுலகில்
செஞ்சொற் புலவரெலாம் செப்பவே - விஞ்சியபால்
ஆழியிற் கண்வளரும் அண்ணல் அருளால் என்றும்
வாழிநம் சித்திரை மன்

982 ஆண்டபெரு நாடும் அரசும் அரும்புலவர்க்கு
ஈண்டு பரிசில்என அளித்துப் - பூண்டசுவைச்
செந்தமிழைக் கேட்டுவக்கும் சேரகுலம் இந்நிலத்துச்
சந்ததம் வாழ்க தழைத்து.