முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 159 |
Untitled Document
1021 | | அம்பொன் வேய்ந்த அரும்புகழும் அமுதங் கொணர்ந்த பெரும்புகழும் இம்பர் ஒருங்கு பெற்றகுலத்து எழுந்த அண்ணா மலைமன்னன் பம்பு மூட இருளகற்றும் பானு வாகி நல்லறங்கள் நம்பி உலகில் நிதம்வளர நன்மை செய்து வாழுகவே! |
1022 | | காந்தி யடிகள் திருவுள்ளம் கனிந்து போற்றும் குருதேவன் ஆய்ந்த அகில கலையாளன் அண்ணல் தாகூர் அமைத்தவுயர் சாந்தி நிகேதப் பெரும்பொழிலில் தமிழும் கமழச் செய்துபுகழ் ஏந்தும் அண்ணா மலைமன்னன் என்றும் வாழ்க! வாழ்கவே! |
1023 | | ஆரைப் பதியின் அழகிதிரு மீனாட்சி சீராருள் சேவடியைச் சேவித்தேன் - ஊரெங்கே ஆக்கும் பெரியோன் அகஸ்திலிங்க வேளெல்லாம் பாக்கியம் பெற்றிடப் பார் |
1024 | | ஈடும் எடும்புமிலா ஏகபல சாலியென்றிந் நாடுபுகழ் கேசவ நண்பனே! - பீடுபெற ஆரம் உனக்கின் றணிகின்றேன் நீயென்முன் பாரம் எடுத்ததிறன் பார்த்து. | |
|
|