பக்கம் எண் :

158கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1017 உள்ள முருகச் செவிகுளிர
     ஓதும் தெளிந்த செந்தமிழின்
தெள்ளத் தெளிந்த செந்தமிழின்
     தெய்வ கீதம் செழித்தோங்க
எள்ளத் தனையும் சலியாமல்
     இரவும் பகலும் உழைத்திடுநம்
வள்ளல் அண்ணாமலை மன்னன்
     வாழ்க! வாழ்க! வாழ்கவே!

1018 பாரி பாரி யென்றுகவி
     பாடும் புலவர் புகழ்பாட
வாரி வாரி வழங்கிடுநம்
     வள்ளல் அண்ணா மலைமன்னற்கு
ஓரும் ஜாதி மதபேதம்
     ஒன்றும் நோக்கா தெழுந்துலகில்
நீரைப் பொழியும் மேகமலால்
     நிகர்வே றுண்டோ? நிகழ்த்துவிரே.

1019 உருகி அன்பு பெருகிவழிந்து
     ஓடி யொழுக எதிர்வந்து
வருக வருக வருகவென
     மதுர மொழிகள் பலகூறி
அருகில் அமரச் செய்தென்னோடு
     அளவ ளாவி அமுதளித்த
தருகை நீண்ட பெருந்தகையின்
     தருமம் ஓங்கி வளருகவே!

1020 நாடு சேர்ந்த நல்லவையில்
     நடுநா யகமா யெழுந்தருளி
ஈடிலாத பொன்னாடை
     எவருங் காண எனக்கணிந்து,
பீடு மிகவே பெறவைத்த
     பெரியன் அண்ணா மலைமன்னன்
நீடுவாழ ஈசனை யான்
     நித்தம் நித்தம் தொழுவேனே.