முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 157 |
Untitled Document
1011 | | அன்னமிடு சத்திரமாம்; ஆதுலர்கள் சாலையாம், மன்னுகலை ஓங்கி வளரிடமாம் - இன்னமுதம் பண்ணா பசுந்தமிழிறிற் பாவாணர் பாடுபுகழ் அண்ணா மலைமன் அருள். |
1012 | | தில்லைப் பதியுடையான் சிற்றம்பலந் தன்னில் அல்லும் பகலும்நின் றாடுகின்றான் - எல்லைக்கண் அண்ணா மலைமன் அமைத்த கலைக்கழகம் கண்ணாரக் கண்டு களித்து. |
1013 | | தத்தளித்து நின்ற தமிழிசைச் செல்விக்குப் புத்துயிரை ஊட்டியநற் புண்ணியவான் - பத்தியுடன் எண்ணான் கறமும் இனிதா வளர்த்துமகிழ் அண்ணா மலைமன்ன னாம். |
1014 | | பூவாரம் தந்திடுவான்; பொன்னாடை போர்த்திடு வான்; நாவார நல்லுரையும் நல்கிடுவான் - பாவாணர்க்கு அன்புசெய் திந்நாளில் அண்ணா மலைமன்போல் இன்படைவார் உண்டோ? இசை. |
1015 | | ஐயம் அகல உண்மைகளை ஆய்ந்து காணும் அறிவுடையோன்; செய்யும் வினைகள் ஒவ்வொன்றும் திருந்தச் செய்யும் திறம்பெற்றோன்; கையிற் கொண்ட கருங்கல்லும் கனகம் சொரியச் செய்திடுவான்; வையம் புகழும் தனவணிகர் மணியாம் அண்ணா மலைமன்னே. |
1016 | | தில்லைப் பதியிற் பல்கலையும் செழித்து வளர இடங்கண்டோன்; இல்லை யென்னா தெவ்வெவர்க்கும் ஈந்து மகிழும் இயல்புடையோன்; சொல்லை மறவாப் புகழ்வேந்தன்; சுற்றம் தழுவும் திருவாளன்; நல்லன் அண்ணா மலைமன்னன் நாட்டுக் கணியாய் வாழுகவே! | |
|
|