Untitled Document
1035 | | மண்ணைப் பொன்னாக்கும் மதியூகி! வாய்த்தவினை எண்ணித் துணியும் இயல்புளாய்! - புண்ணியஞ்சேர் இந்தியநா டாளும் இராஜகோ பாலா! நீ சந்ததமும் வாழ்க தழைத்து. |
1036 | | தந்திரிக்குத் தந்திரியாய், தாசனுக்குத் தாசனாய், மந்திரிகள் மெச்சுமதி மந்திரியாய் - வந்துதித்த இன்னருட் செல்வா! இராஜகோ பாலாநீ மன்னுலகில் வாழ்க மகிழ்ந்து. |
1037 | | மண்ணுலக மாமடந்தை வாடாது வாழ்வுபெறத் தண்ணிழல் தந்துநிதம் தாங்குகவே - எண்ணரிய பூபாலர் போற்றும் புதுவைத் திருராஜ கோபாலன் கொற்றக் குடை. |
1038 | | அந்திமதி சூடிநின் றம்பலத்தி லாடிநிதம் சிந்தைமகிழ் கூத்தன் திருவருளால் - செந்தமிழ் நாடுபுகழ் சம்பந்தன் நடிக மகராசன் நீடுலகில் வாழ்க நிலைத்து. |
1039 | | ஈடி லாத செந்தமிழில் இனிய தமிழில் அழகழகாய் நாட கங்கள் பலதந்த நடிக ராஜன் சம்பந்தன் நீடிவ் வுலகில் பல்லாண்டு நிலைத்து வாழ நல்லவரம் ஆடும் கூத்தன் எம்பெருமான் அருள்க அருள்க அருள்கவே! | |
|
|